என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "popular frontbof india"

    • தேசிய புல​னாய்வு முகமை பி.எப்.ஐ. அமைப்​புக்கு சொந்த​மான இடங்களில் சோதனை நடத்​தி​யது.
    • பி.எப்.ஐ. அமைப்​பைச் சேர்ந்த முக்​கிய உறுப்​பினர்கள் 28 பேரை அமலாக்​கத் துறை கைது செய்​துள்​ளது.

    பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), பி.எப்.ஐ. அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.

    மேலும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த வழக்கில் இதுவரை பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 28 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அத்துடன் ரூ.62 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கி இருந்தது.

    இந்நிலையில், பி.எப்.ஐ. மற்றும் அதன் அரசியல் கட்சியுடன் (எஸ்.டி.பி.ஐ.) தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு சொந்தமான மேலும் ரூ.67 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

    இதில் பெரும்பாலான சொத்துகள் கேரளாவில் உள்ளன. இத்துடன் இந்த வழக்கில் முடக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு ரூ.129 கோடியாக அதிகரித்துள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள், ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.68.62 லட்சம் மதிப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், பணமோசடி வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இதையும் படியுங்கள்.. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல் ?
    ×