search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத்திர தொழிலாளர்கள்"

    • எவர்சில்வர் 21 சதவீதமும், பித்தளை, செம்பு 30 சதவீதம் என்ற அதே அளவிலாவது கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி வருகிறது.
    • 2 சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படவில்லை.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களுக்கான புதிய கூலி உயர்வு தொடர்பாக எவர்சில்வர், செம்பு, பித்தளை பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினரிடைேய பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொழில் நலிவடைந்து இருப்பதால் அடுத்த ஒரு ஆண்டிற்கு பழைய கூலியே வழங்கப்படும் என்று கூறப்பட்டது.ஆனால் இதை ஏற்காத கூட்டு கமிட்டி சார்பில் பழைய கூலி உயர்வான எவர்சில்வர் 21 சதவீதமும், பித்தளை, செம்பு 30 சதவீதம் என்ற அதே அளவிலாவது கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவர்சில்வர் தரப்பில் 10 சதவீதமும், பித்தளை தரப்பில் 15 சதவீதமும் கூலி உயர்வு வழங்க முன் வந்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று மீண்டும் 2 சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து பாத்திர தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி உயர்வு வழங்கக்கோரி நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அனுப்பர்பாளையத்தில் உள்ள பாத்திர உற்பத்தியாளர் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி அறிவித்துள்ளது. இதில் அனைத்து தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டு வேண்டும் என்றும் கூட்டு கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

    • சங்க தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.
    • சம்பள ஒப்பந்தம் முடிந்து ஒன்றரை மாதமாகியும் புதிய சம்பள ஒப்பந்தம் இழுபறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ந் தேதி நிறைவு பெற்றது.

    புதிய சம்பளம் ஒப்பந்தம் குறித்து பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் நடந்த பேச்சுவார்த்தை ,பின்னர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பித்தளை பாத்திரத்திற்கு 21ந் தேதியும், எவர் சில்வர் பாத்திரத்திற்கு 23ந் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டது.

    எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கம் நிர்வாக குழு கூட்டம் அனுப்பர்பாளையம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

    தொழில் சூழல் சரியில்லாததால் ஒரு ஆண்டுக்கு பழைய கூலி விகிதத்தையே நடைமுறைப்படுத்த அனைத்து பாத்திர தொழிற்சங்கங்களை கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்து தேதி சொல்லுங்கள், பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம் என தொழிற் சங்க கூட்டு கமிட்டிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.சம்பள ஒப்பந்தம் முடிந்து ஒன்றரை மாதமாகியும் புதிய சம்பள ஒப்பந்தம் இழுபறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பித்தளை, எவர் சில்வர், செம்பு ஆகிய உலோகங்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • பாத்திர பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 3ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதியில் 250க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.பித்தளை, எவர் சில்வர், செம்பு ஆகிய உலோகங்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இத்தொழிலை நம்பி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். பாத்திர பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 3ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.கடந்த முறை 2019 டிசம்பர் மாதம் 31ந் தேதி சம்பள ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தம் வருகிற டிசம்பர் 31ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    கடந்த முறை எவர்சில்வர் பாத்திரங்களுக்கு 21 சதவீதம், பித்தளை பாத்திரங்களுக்கு 30 சதவீதம், ஈய பூச்சு பாத்திரங்களுக்கு 37 சதவீதம், செம்பு பாத்திரங்களுக்கு 30 சதவீதம் சம்பளம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் சி.ஐ.டி.யு., பாத்திர சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க செயலாளர் குப்புசாமி, தலைமையில் நடந்தது.ஒரு வாரத்தில் அனைத்து கட்சி பாத்திர தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து, அதில் சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது, அதை தொடர்ந்து பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    • அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 250க்கு மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.
    • இங்கு பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அனுப்பர்பாளையம் :

    அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 250க்கு மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இங்கு எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு பாத்திர தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு விட கூடுதல் போனஸ், ஒரு வாரத்திற்கு முன் வழங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கத்தினர், உற்பத்தியாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.உலோகத்தின் அடிப்படையில் உற்பத்தியை பொறுத்து 16 சதவீதம் முதல், 18 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 95 சதவீதத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு விட்டதாக உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • தேய்ப்பு தேய்க்கும் தொழிலாளா்களுக்கு போனசாக ரூ.2,500 வழங்க வேண்டும்
    • கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. பாத்திர சங்க செயலாளா் கே.குப்புசாமி தலைமை வகித்தாா்.

     திருப்பூர்:

    திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யூ. பாத்திர சங்க அலுவலகத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. பாத்திர சங்க செயலாளா் கே.குப்புசாமி தலைமை வகித்தாா். இதில் பாத்திர தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த ஆண்டை விட கூடுதலாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். தேய்ப்பு தேய்க்கும் தொழிலாளா்களுக்கு போனசாக ரூ.2,500 வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு 10 நாள்களுக்கு முன்பாகவே போனஸ் வழங்கும்படி பாத்திர பட்டறைதாரா்களையும், பாத்திரம் உற்பத்தியாளா்களையும் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×