search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடங்கள்"

    • இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
    • அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி தேர்ச்சி சதவீதம் குறைந்த பாடங்கள், பள்ளிகள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதுசார்ந்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் எடுத்துரைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் தேர்ச்சி சதவீதம் குறைந்திருந்தால், அதற்கான காரணத்தை உரிய ஆசிரியரே குறிப்பிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான தீர்வையும், அந்த ஆசிரியரே தெரிவிக்க வேண்டும். அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிளஸ்-2 தேர்வில் பண்ருட்டி ஜான்டூயி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • யோகஸ்ரீ என்ற மாணவி வணிகவியல், பொருளியல், கணினிபயன்பாடு ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    நடந்து முடிந்த பிளஸ்- 2 தேர்வில் பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி+2பொதுதேர்வில்தேர்வு எழுதிய 402 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100சதவீததேர்ச்சிபெற்றுசாதனைபடைத்துள்ளது. மாணவன்அருண் கார்த்திக், மாணவி தர்ஷனாஆகிய இருவரும் 591 மதிப்பெண்கள்பெற்று முதலிடம் பிடித்தனர். 570க்கு மேல் 14 மாணவ-மாணவியர்களும் 550க்குமேல் 29 மாணவ- மாணவியர்களும், 500க்கு மேல் 92 மாவை, மாணவியர்களும்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    25 மாணவ மாணவிகள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்துள்ளனர். மாணவன்ஹரிஹரன் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகியமூன்று பாடங்களிலும், யோகஸ்ரீ என்ற மாணவி வணிகவியல், பொருளியல், கணினிபயன்பாடு ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் வீரதாஸ், பள்ளி முதல்வர் வாலண்டினா லெஸ்லி, தலைமை யாசிரியர் மணிகண்டன், ஆசிரியர்கள் பாராட்டி பரிசு ழங்கினர்.

    • ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிக்கு மாணவ-மாணவிகள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்தனர்.
    • நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 2065 பள்ளிகள் திறக்கப்பட்டது.‌ இன்று முதல் 2022-23-ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு தொடங்கியது.

    ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிக்கு மாணவ-மாணவிகள் காலையிலேயே ஆர்வத்து டன் வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிகள் திறக்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளிகள் திறப்பு மற்றும் முடியும் நேரம் சிறிது மாறுபட்டது.

    பள்ளிகள் தொடங்கி யதும் மாணவ- மாணவி களுக்கு இலவச பாடப், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதனை அவர்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்துப் பார்த்தனர். வகுப்பு தொடங்க ப்பட்டதும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்கவில்லை. மாறாக அரசு வழிகாட்டுதல் படி மாணவ- மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. நல்லொழுக்கம் மற்றும் உளவியல்ரீதியான வகுப்புகளும் நடத்தப்ப ட்டன.

    இந்த வாரம் முழுவதும் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.அடுத்த வாரம் முதல் வழக்கமான பாடங்கள் நடத்தப்பட உள்ளன.இதுதவிர பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது. மீண்டும் ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் தஞ்சையில் பள்ளிகள் அமைந்திருக்கும் பகுதிகள் பரபரப்பாக இயங்கின. வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும், 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×