search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா ஜனதா"

    இந்தியாவின் பணக்கார கட்டிட காண்டிராக்டர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏ முதல் இடத்தில் உள்ளார். #BJP #MangalPrabhatLodha
    மும்பை:

    மராட்டிய மாநிலம் மலபார்ஹில் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. மங்கள் பிரபாத் லோதா.

    கட்டிட காண்டிராக்ட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் இவர் மிகப்பெரிய கோடிசுவரர் ஆவார்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பணக்கார கட்டிட காண்ட்டிராக்டர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான மங்கள் பிரபாத் லோதாவுக்கு ரூ.27,150 கோடி சொத்து இருப்பது தெரிய வந்தது. அவர் இந்திய பணக்கார கட்டுமான நிறுவன அதிபர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

    கடந்த ஆண்டு அவர் ரூ.18,610 கோடியுடன் 2-வது இடத்தில் இருந்தார். தற்போது ரூ.8540 கோடி சொத்து அதிகரித்து முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

    எம்பசி பிராபர்ட்டி டெவலப்மென்ட் அதிபர் ரூ.23,160 கோடி சொத்துடன் 2-வது இடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டு ரூ.16,700 கோடியுடன் 3-வது இடத்தில் இருந்தார். #BJP #MangalPrabhatLodha
    காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பேட்டியளித்துள்ளார். #ministerParmeswara #Congress
    பெங்களூரு :

    கர்நாடகா துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இட ஒதுக்கீட்டு விஷயத்தில் அடித்தட்டு சமுதாயத்தினருக்கு உரிய நீதியை வழங்க வேண்டியது அவசியம். அந்த நோக்கத்தின் அடிப்படையில் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பதவி உயர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்டதிருத்த மசோதா விரைவில் அமல்படுத்தப்படும்.

    இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். இந்த சட்டத்திருத்தம் இன்னும் அமலுக்கு வராததால், சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே உள்பட அனைவருக்குமே வருத்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று (நேற்று) பிரியங்க் கார்கே என்னை வந்து சந்தித்து பேசினார். இந்த சட்டம் கர்நாடகத்தில் இன்றோ (அதாவது நேற்று) அல்லது நாளையோ (இன்று) அமலுக்கு வரும்.

    பெங்களூருவில் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை மூடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காலத்தில் சாலைகளில் குழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இந்த விஷயத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். பெரும்பாலான இடங்களில் சாலை குழிகளை மூடிவிட்டோம். நேற்று திடீரென மழை பெய்த காரணத்தால், சாலைகளில் மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளன.



    குழிகளை எண்ணி மூடுவது என்பது சாத்தியம் இல்லை. சாலைகளில் குழிகள் ஏற்படும்போது, அதை மூடுகிறோம்.

    பா.ஜனதாவுக்கு ஆட்சி அதிகார தாகம் உள்ளது. அதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதனால் அக்கட்சியினர் அமைதியாக இருக்காமல் ஏதாவது சிக்கலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பா.ஜனதாவினர் அந்த முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

    காங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. சில எம்.எல்.ஏ.க்கள் கோவிலுக்கு சென்றனர். அதை வேறு ரீதியில் மக்களிடையே எடுத்துக்கூறி குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் சுதாகர் மற்றும் எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கு அதிருப்தி இருப்பது உண்மை தான். அவர்களின் தொகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. அதை நாங்கள் சரிசெய்வோம். மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரியாக வேண்டும் என்று ஆசை இருப்பது சகஜமானது. இதை தவறு என்ன சொல்ல முடியாது.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார்.

    இதைதொடர்ந்து அவரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி குமாரசாமி பாரபட்சமாக தொகுதி நிதி ஒதுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி குமாரசாமி பாரபட்சத்துடன் பார்ப்பதாக சொல்வது பொய். எனக்கு தெரிந்தவரையில் அவர் அனைவரையும் சரிசமமாக பார்த்து நிதி ஒதுக்கீட்டை செய்கிறார்‘ என்றார். #ministerParmeswara #Congress
    உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் தெரிவித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். #RamKadam #BJP
    மும்பை :

    மும்பையை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நடந்த உறியடி நிகழ்ச்சியில், இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி வந்து ஒப்படைப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார்.

    இந்த நிலையில் உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் செய்தி வெளியிட்டதன் மூலம் அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். ராம் கதம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்தி மற்றும் மராத்தியில் புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.



    ஆதாரமற்ற தகவல்களை வைத்து இரங்கல் செய்தி வெளியிட்ட அவரை சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலடித்தனர். சிலர் கண்டனமும் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் உடனடியாக தன் பதிவை திரும்பப்பெற்றுக்கொண்டார். மேலும் “நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து கடந்த 2 நாட்களாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவரின் நல்ல உடல்நிலைக்காகவும், வேகமாக குணமடையவும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என மற்றொரு பதிவை வெளியிட்டார். #RamKadam #BJP
    கூட்டணி அரசு பிழைக்குமா? என்பது குறித்தே கவலைப்படுகிறார் என்றும், 100 நாட்களில் கண்ணீர் சிந்தியது தான் சாதனை என்றும் குமாரசாமி மீது பா.ஜனதா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. #kumaraswamy #BJP
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) ஆட்சி நேற்றுடன் 100 நாட்களை நிறைவு செய்தது. இந்த 100 நாட்களில் முக்கியமாக விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி பெருமிதமாக கூறி இருக்கிறார். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா குமாரசாமியை கடுமையாக விமர்சித்து கருத்தை வெளியிட்டுள்ளது. அக்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    முதல்-மந்திரி குமாரசாமியின் கூட்டணி அரசு 100 நாட்களை கடந்துள்ளது. ஆனால் அதை கொண்டாடும் மனநிலையில் குமாரசாமி இல்லை. இந்த கூட்டணி அரசு பிழைக்குமா?, பிழைக்காதா? என்ற கவலையிலேயே அவர் உள்ளார். இந்த 100 நாட்களில் குமாரசாமி செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணீர் சிந்தியது தான் சாதனை. எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.



    விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக குமாரசாமி சொல்கிறார். ஆனால் இதுவரை ஒரு விவசாயிக்கு கூட கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கவில்லை. சாதி மற்றும் பணத்தின் அடிப்படையில் மக்கள் ஓட்டுப்போட்டதாக குமாரசாமி கூறினார். இதன் மூலம் வாக்களித்த மக்களை முதல்-மந்திரி அவமதித்துவிட்டார்.

    இந்த கூட்டணி ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் தூய்மை நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 216-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வது மற்றும் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் தொழிலில் மந்திரிகள் ஈடுபட்டுள்ளனர். வளர்ச்சி பணிகளில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தங்களின் கவலைகளை தீர்த்துக்கொள்ளவே கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளன. இது சுயசேவையாற்றும் அரசு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #kumaraswamy #BJP
    தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் ஆசைக்காக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார். #ThambiDurai #BJP
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 23 நாட்கள் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம். தற்போது காவிரி நீர் தமிழகம் வந்துள்ளது. இதே போல் பாராளுமன்றத்தில் தமிழக உரிமைக்காக போராடுவோம்.

    தேர்தல் கூட்டணி பற்றி தலைமை கழகம்தான் முடிவு செய்யும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.

    8 வழிச்சாலை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியாக கையாளுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகிறது. அது பா.ஜனதாவின் ஆசைதான். ஆனால் ஆசைக்காக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.



    அமித்ஷா தமிழகத்தில் ஊழல் என்று கூறுகிறார். ராகுல்காந்தி பா.ஜனதாவில் ஊழல் என்றும், ஸ்டாலின், அ.தி.மு.க.வில் ஊழல் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் ஆட்சியை பிடிக்க தங்கள் இஷ்டம்போல் பேசி வருகிறார்கள்.

    ஆளும் கட்சி மீது ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    தமிழகத்தில் சமுதாயம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை திராவிட கட்சிகளால்தான் காப்பாற்ற முடியும். தேசிய கட்சிகளால் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு தம்பித்துரை கூறினார். #ThambiDurai #BJP


    ×