search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் வழிப்பறி"

    • சத்தியமூர்த்தியை மிரட்டி காருக்குள் ஏறிக் கொண்டனர். அதில் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டு ஈரோடு ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் பகுதிக்கு வந்தார்.
    • சத்தியமூர்த்தியின் கை, கால்களை கட்டி போட்டு காரில் இருந்த ரூ.25 லட்சத்தை வழிப்பறி செய்து கொண்டு வேறு ஒரு வாகனத்தில் தப்பி சென்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (47). இவர் ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் இரும்பு உருக்கு ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இரவு இவர் ஓலப்பாளையத்தில் உள்ள கம்பெனியின் கிளை அலுவலகத்தில் இருந்து ரூ.25 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் ஈங்கூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஈங்கூர் நட்சத்திரா கார்டன் என்ற பகுதியில் வந்தபோது 3 பேர் கும்பல் காரை வழிமறித்து நிறுத்தினர்.

    பின்னர் அவர்கள் சத்தியமூர்த்தியை மிரட்டி காருக்குள் ஏறிக் கொண்டனர். அதில் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டு ஈரோடு ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் பகுதிக்கு வந்தார்.

    பின்னர் 3 பேர் கும்பல் காருக்குள்ளேயே சத்தியமூர்த்தியின் கை, கால்களை கட்டி போட்டு காரில் இருந்த ரூ.25 லட்சத்தை வழிப்பறி செய்து கொண்டு வேறு ஒரு வாகனத்தில் தப்பி சென்றனர்.

    இந்த நிலையில் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு சத்தியமூர்த்தி கட்டப்பட்டிருந்த கை, கால்களை அவிழ்த்து கொண்டு இந்த சம்பவம் குறித்து கம்பெனிக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமூர்த்தி காரில் பணம் கொண்டு வரும் தகவலை தெரிந்த யாரோ ஒருவர்தான் ஆட்களை வைத்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இந்த அடிப்படையில் கார் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து கார் நிறுத்தப்பட்ட இடம் வரை பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகிறன்றனர்.

    இந்த துணிகர வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • ரூ. 3 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பி சென்றனர்.

    கோவை,

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் சந்துரு (வயது 19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது நவ இந்தியா ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. 3 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.

    கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் மதுசூதனன் (42). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் மதுசூதனனை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், பணம் ரூ. 600, ஒரு ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இது குறித்து மதுசூதனன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (27). இவர் கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் நேற்று கோவை வந்தார்.

    தனது அறைக்கு செல்வதற்காக தண்ணீர் பந்தல் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த 3 சம்பவமும் ஒரே நாளில் நடைபெற்றதால் இதில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

    ×