search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசும்பொன் தேவர்"

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ். சார்பில் வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சி அணிவிக்கப்பட்டது.
    • வெள்ளி கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிட த்தில் வருகிற 30-ந் தேதி 61-வது குருபூஜை மற்றும் 116-வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

    கடந்த ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினர் சார்பில் தேவர் நினை விடத்தில் உள்ள தேவர் சிலைக்கு சுமார் 10½ கிலோ எடை கொண்ட வெள்ளிக் கவசம் வழங்கபட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று, அந்த வெள்ளி கவசம் தேவர் சிலைக்கு ஓ.பி.எஸ். மகன் விஜயபிரதீப் முன் னிலையில் மீண்டும் அணி விக்கப்பட்டது. மேலும் புதிதாக இந்த ஆண்டு செய்யப்பட்ட 12 கிலோ எடையுள்ள வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சியும் பூஜைகள் நடத்தி அணிவிக்கபட்டது.

    இதனையொட்டி தங்க கவசம் வரும் வரை வெள்ளி கவசம், அணிவிக்கபட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் மூக்கையா, ஒன்றிய செய லாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராம லிங்கம், வாசு, அழகு சரவ ணன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பரிதி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சின்னாண்டு, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சோலைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று முதல் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    • அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 115-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கமுதி தனி ஆயுதப்படை கூட்ட அரங்கில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மதுரை, ராமநாதபுரம் கோவை உள்பட 28 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 5 டிஐஜிக்களும் இதில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், தேவர் குருபூஜை விழாவையொட்டி இன்று முதல் 30ந் தேதிவரை 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கூறினார்.

    தடை செய்யப்பட்ட பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாவும், காவல் துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுபவர்களின் வாகனங்களை, கண்காணிப்பு கேமராக்கள் பதிவு மூலம் ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் அவர் எச்சரித்தார்.

    இதனிடையே, தேவர் ஜெயந்தி விழாவின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.

    ×