என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
- மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
- தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டியவர் தேவர் பெருமகனார்.
பசும்பொன் முத்துராமலிக்க தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிக்க தேவரின் பெயரை வைக்கவும் இபிஎஸ் வலியுறுத்துவோம்.
தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டியவர் தேவர் பெருமகனார்" என்றார்.
Next Story






