என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PasumPonDevar"

    • மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
    • தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டியவர் தேவர் பெருமகனார்.

    பசும்பொன் முத்துராமலிக்க தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

    மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசமி திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிக்க தேவரின் பெயரை வைக்கவும் இபிஎஸ் வலியுறுத்துவோம்.

    தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டியவர் தேவர் பெருமகனார்" என்றார்.

    • முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • விவகாரம் தொடர்பாக இருவரை போலீசார் பிடித்து விசரணை நடத்தி வருகின்றனர்.

    பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்ற காரை நோக்கி கற்கள் மற்றும் காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    ஈபிஎஸ்க்கு எதிராக முழக்கமிட்டபடி சிலர் வீசிய கற்கள் மற்றும் காலணி, அவரது காருக்கு அருகே விழுந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக இருவரை போலீசார் பிடித்து விசரணை நடத்தி வருகின்றனர்.

    ×