search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்கேற்க அழைப்பு"

    • உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக 6 பேர் கொண்ட குழுவினர் சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர்.
    • நடப்பாண்டு செப்டம்பர் மாதம் விண்கற்கள் கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகிறது.

    உடுமலை :

    சர்வதேச விண்கற்கள் கண்டறியும் நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தன்னார்வ அமைப்புகள், அரசுத்துறைகளுடன் இணைந்து விண்வெளியில் உள்ள விண்கற்களை கண்டறிய ஆய்வு நடத்துகிறது.

    மாதம்தோறும் நடத்தப்படும் இந்த ஆய்வில், ஆசிரியர்கள், அறிவியல் தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.அதன்படி கடந்தாண்டு, இரு முறை உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக 6 பேர் கொண்ட குழுவினர் சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர். இதேபோல நடப்பாண்டு செப்டம்பர் மாதம் விண்கற்கள் கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகிறது.

    லேப்டாப், கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வில் பங்கேற்கலாம்.தகவல் அறிய கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 8778201926 என்ற வாட்ஸ்ஆப் எண், galilioscienceclub@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    • திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 12 ந் தேதி தொடங்கி 15ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை, டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், தொழில் நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வரும் 12 -ந்தேதி தொடங்கி 15ந் தேதி வரை நடைபெற உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், 0421 2999152, 94990 55955 என்கிற எண்களில் தொடர்புகொண்டு, முன்பதிவு செய்யவேண்டும்.

    வரும் 11-ந் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருடன் இணைந்து தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் முன்னுரிமை, டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

    பெண்களுக்காக வரும் 12-ந் தேதி நடத்தப்படும் நிகழ்ச்சியில், 10-ம்வகுப்பு, பிளஸ்2 மற்றும் கல்லூரி படிப்பிற்குப்பின் என்ன படிக்கலாம்,அ ரசு வழங்கும் கல்விக்கான ஊக்கத்தொகை விவரங்கள், சுய தொழில்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×