search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய் தாக்குதல்"

    • கடத்தூர் பகுதியில் ரோஜா செடிகளில் நோய் தாக்குதல் ஏற்படுதவதால் அதனை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த கோரிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    • பல ஏக்கரில் ரோஜா சாகுபடி

    தருமபுரி மாவட்டப் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பூச்செடிகள் பயிரிட்டு வருகின்றார். இந்த பூச் செடிகள் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க அந்த அந்த பகுதிகளில் உள்ள மருத்து கடைகளில் மருந்துகள் வாங்கி அடித்து வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு பூக்களுக்கு போதிய விலையில்லாத நிலையில் பெரும் நஷ்டத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் செடிகள் நோய், பூச்சிகள் புலுக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க மருந்துகள் தெளித்தும் பலனில்லாத நிலையில் மேலும் இழப்பிற்க்கு உள்ளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிராமங்களில் நேரடி ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நோய் தடுக்கும் தரமான மருந்துகள் பயன்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.

    • குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன.
    • பீன்ஸ் கொடிகளில் நோய் தாக்கத்தால் பூக்கள் விடுவது தடுக்கப்படுகிறது. அப்படியே பூக்கள் வந்தாலும், காய்கள் தரமின்றி உள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட பகுதி விவசாயி கள் நீண்ட நாள் பயிர் சாகுபடிக்கு மாற்றாகக் குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும் பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களை சொட்டுநீர் பாசனம் மூலம் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.

    இங்கு அறுவடையாகும் பீன்ஸ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் பீன்ஸ் கொடிகளில் நோய் தாக்குதல் அதிகரித்து மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    இது தொடர்பாக ஓசூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    ஓசூர் பகுதியில் நல்ல மண் வளம் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன.

    அதேநேரம் உரிய ஆலோசனை இல்லாததால் தரம் இல்லாத விதை, மருந்து, பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் நோய் தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

    பீன்ஸ் கொடிகளில் நோய் தாக்கத்தால் பூக்கள் விடுவது தடுக்கப்படுகிறது. அப்படியே பூக்கள் வந்தாலும், காய்கள் தரமின்றி உள்ளது.

    ஒரு ஏக்கர் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் மற்றும் பந்தல் அமைத்தல் என ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. தற்போது, சந்தையில் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டாலும், மகசூல் பாதிப்பால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே, ஓசூர் பகுதியில் பீன்ஸ் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக் கலைத்துறை மூலம் உரிய தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் நோய் பாதிப்பின்போது, கட்டுப்படுத்த உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.
    • பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்ட பகுதிகளில் விவசாயிகள் பல ஆயிரம் எக்டேர் அளவிற்கு வருடம் தோறும் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்து வருகின்றனர்.

    இந்த மரவள்ளி கிழங்கு பயிர்களில் தற்பொழுது செம்பேன், மாவுப்பூச்சி தாக்குதலால் செடிகள் காய்ந்து கருகி வருகின்றது.

    இதனால் பெருமளவு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.

    குறிப்பாக தருமபுரி மாவட்ட பகுதிகளில் பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் தென்கரை கோட்டை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல 100-க்கும் மேற்பட்ட கிராமத்தில் விவசாயிகள் அதிக அளவாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர்.

    பல நேரங்களில் மரவள்ளி பயிரிட்ட விவசாயிகளுக்கு செலவு செய்த பணம் கூட வர முடியாத நிலையில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது இந்த பூச்சிகளின் நோய் தாக்குதலால் செடிகள் இலைகள் பழுத்து காய்ந்து உதிர்ந்து வருகிறது.

    இதனால் மகசூல் பெருமளவு குறையும் என்று விவசாயிகள் தெரிவித்து பெரும் கவலையடைந்து வருகின்றனர்.

    இவற்றை தடுக்க வேளாண்மை துறை அதிகாரிகள் பஞ்சாயத்து பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடுகள் செய்து அவற்றை தடுப்ப தற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2000 ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.
    • சீசன் காலங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 60 முதல் 70டன் மாங்காய் கிடைக்கும்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தென்னை, கரும்பு ,மக்காச்சோளம் சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிகளவு மாங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிப்பட்டி , வாளவாடி, மானுப்பட்டி, சின்ன குமாரபாளையம் ,கொழுமம், கொங்குரார் குட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் 2000 ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.

    மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் மாமரத்தில் பூ பிடித்து காய்க்கத் துவங்கும். இந்த ஆண்டு பூ பிடித்த நிலையில் நோய் தாக்குதல் காரணமாக பூக்கள் உதிர்ந்து வருகின்றன.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- சீசன் காலங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 60 முதல் 70டன் மாங்காய் கிடைக்கும். ஆனால் தற்போது கொத்துக்கொத்தாக பூக்கள் உதிர்ந்து வருகின்றன.சுமார் இரண்டு டன் பூக்கள் வரை உதிர்ந்துவிட்டன. இதனால் விளைச்சல் பாதித்து எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் .ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம் .ஆண்டுக்கு ஒரு முறை சீசன் காலங்களில் விளையும் மாங்காய் மூலம் தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. பூச்சி தாக்குதல் குறித்து தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஏற்கனவே காட்டு யானைகள் தொல்லை உள்ளது. மாமரத்தில் பிஞ்சு பிடித்த உடன் அதன் வாசத்தை மோப்பம் பிடித்து வரும் யானைகள் பிஞ்சுகளை பெருமளவுக்கு தின்று விடும். இந்த நிலையில் நோய் தாக்குதல் ஏற்பட்டு பூ உதிர்ந்து வருவதுகவலை அளிக்கிறது. எனவே தோட்டக்கலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

    • நோய் தாக்கிய செடிகள் விரைவில் பட்டு போவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
    • சில ஆண்டுகளுக்கு முன் பப்பாளி விவசாயத்தை கள்ளிப்பூச்சி அதிக அளவில் தாக்கி அழித்தது.

    திருப்பூர்:

    பொங்கலூர் பகுதியில் பழத்திற்காகவும், பால் எடுப்பதற்காகவும் கணிசமான விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பப்பாளிக்கு கட்டுப்படியான விலை கிடைத்து வருகிறது.

    ஒரு கிலோ 11 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால் பப்பாளியில் வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் செடிகளின் இலைகள் பழுத்து காய்ந்து வருகின்றன. நோய் தாக்கிய செடிகள் விரைவில் பட்டு போவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

    இது குறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    சில ஆண்டுகளுக்கு முன் பப்பாளி விவசாயத்தை கள்ளிப்பூச்சி அதிக அளவில் தாக்கி அழித்தது. பின் படிப்படியாக நிலைமை சீரடைந்தது. கடந்த ஆண்டு சூறைக்காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் ஒடிந்து விழுந்தன. இந்த சீசனில் ஓரளவு விலை கிடைக்கிறது.ஆனால் வைரஸ் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் நோய் முற்றிய செடிகள் வறண்டு விடுகின்றன. இதனை கட்டுப்படுத்த வழி இன்றி தவித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது.

    உடுமலை,

    உடுமலை சுற்றுப்பகுதியில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக,மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வகை வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட முன்பு விவசாயிகள் அதிக தயக்கம் காட்டி வந்தனர்.

    இதையடுத்து மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் மற்றும் மாநில அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.எனவேஇத்தொழிலில்ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து தமிழகத்தில்வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலை பெற்றது.பிற மாநிலங்களில் இருந்து உடுமலைக்கு வந்து மல்பெரி தோட்ட பராமரிப்பு, புழு வளர்ப்பு மனை பராமரிப்பு, அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுச்செல்லும் அளவுக்குஇப்பகுதி இத்தொழிலில் முன்னிலையில் இருந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக மல்பெரி வளர்ப்பு, இளம்புழு பராமரிப்பு, நோய்த்தாக்குதல் கட்டுப்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் முறையாக கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பெருந்தொற்று பரவல் ஊரடங்கு காலத்தில் பட்டுக்கூடுகளை சந்தைப்படுத்த, சிரமம் நிலவியது.அப்போது விலை வீழ்ச்சி, விற்பனை சந்தை பிரச்னை காரணமாக இத்தொழிலை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெண்பட்டுக்கூடுகள் விலை கிலோ 700 ரூபாய் அளவுக்கு உயர்ந்த போது உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.கடந்த சில மாதங்களாக உற்பத்தியை சீராக்க விவசாயிகள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். விலையும் நிலையாக கிடைக்கத்துவங்கியது. ஆனால் தற்போது, உடுமலை பகுதியிலுள்ள மல்பெரி தோட்டங்களில் இலைப்பேன் உள்ளிட்ட நோய்த்தாக்குதல் துவங்கி வேகமாக பரவி வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. பல்வேறு காரணங்களால், மல்பெரி செடிகளில் இலைப்பேன் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இவ்வகை பேன்கள் மல்பெரி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சிக்கொள்கிறது.எனவே தரமில்லாத மல்பெரி இலைகள் உருவாகிறது. இவ்வகை இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளித்தால், புழுக்களும் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி தரமற்ற பட்டுக்கூடுகளே உற்பத்தியாகும்.கொழுந்து செடிகளில் இத்தாக்குதல் அதிகளவு காணப்படுகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாததால் இந்த சீசனில் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து நஷ்டத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.பட்டு வளர்ச்சித்துறை சார்பில் முன்பு குறிப்பிட்ட இடைவெளிகளில் தொழில்நுட்ப விழிப்புணர்வு கூட்டங்கள் கிராமம் வாரியாக நடத்தப்படும். இதனால்அந்தந்த பகுதி விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.மீண்டும் இத்தகைய கூட்டங்களை நடத்திதரமான மல்பெரி இலை, பட்டுக்கூடு உற்பத்திக்கு அரசு உதவ வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×