search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மோர் பந்தல்"

    • நம்புதாளையில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • தரணி முருகேசன் தலைமை தாங்கினார்.

    தொண்டி

    தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார்.

    ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் குருஜி, மாவட்ட பார்வையாளாளர் முரளீதரன், ஒன்றிய தலைவர் துரை ஜெய பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய செய லாளர் கானாட்டாங்குடி சூர்யா, ஒன்றிய இளை ஞரணி பொதுச்செயலாளர் அ.மணக்குடி சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.மாவட்ட அமைப்புசாரா துணை தலைவர் ரத்னக் குமார் நன்றி கூறினார்.

    பொதுமக்களுக்கு தர்பூசணி பழம், நீர், மோர் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி உள்ளிட்ட 16 வகையான பழங்களை மண் குவளையில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, நகர செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட துணைச் செயலாளர் முத்துராமன், லதா அதியமான், ஒன்றிய செயலாளர் தனபாண்டியன், மதன்குமார், பாண்டியன், தனசேகரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, காசிபாண்டி, வினோத், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • தர்பூசணி, இளநீர், வாழைப்பழம், வெள்ளரிக் காய், ஜூஸ், மோர், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் வழங்கப்பட்டது

    சென்னை:

    சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

    அ.தி.மு.க. சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளரும் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளருமான பெரும்பாக்கம் எ.ராஜசேகர் ஏற்பாட்டில் மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. கந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் நீர் - மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

    இதில் தர்பூசணி, இளநீர், வாழைப்பழம், வெள்ளரிக் காய், ஜூஸ், மோர், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் வழங்கப்பட்டது

    நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் டி.சி. கருணா, ஜி.எம். ஜானகிராமன், வி. குமார், 190-வது மாமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம், மற்றும் நிர்வாகிகள் செல்வ ராணி சுந்தர், சித்தாலப்பாக்கம் தாமோதரன், அரசங்கழனி கண்ணன், மேடவாக்கம் எம்.பி. கண்ணபிரான், எம்.ஜி.சக்திவேல், கோவிலம்பாக்கம் தேவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெரும்பாக்கம் ராஜசேகர் சிறப்பாக செய்து இருந்தார்.

    • சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் அ.தி.மு.க. மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றியம் சார்பில் வ.உ.சி. சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்து புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.

    இதில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன், பேரூர் நிர்வாகிகள் முருகேசன், கவுன்சிலர்கள் ரேகா ராமசந்திரன், கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், ெபாதுக்குழு நாகராஜ், மாவட்ட மகளிர் அணி லட்சுமி, கூட்டுறவு சங்க தலைவர் ராமன், மணிகண்டன், மன்னாடிமங்கலம் கிளை செயலாளர் ராஜபாண்டி, முன்னாள் சேர்மன் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×