search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகபாம்பு"

    • பார்சியல் ஆல்பினோ கோப்ரா வகையைச் சார்ந்த இந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பாம்பை பார்த்தால் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    கோவை,

    கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்தவர் வழக்கம் போல தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப சென்றார்.

    அப்போது அந்த தொட்டிக்குள் ஒரு பாம்பு பதுங்கி இருப்பது தெரிய வந்தது. எனவே அவர் உடனடியாக வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரர் மோகன் என்பவரை தொடர்புகொண்டார்.

    அவரும் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்து உள்ளார். அப்போது வனப் பகுதியில் அரிதாக உலா வரும் வெள்ளை நாகம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    பார்சியல் ஆல்பினோ கோப்ரா வகையைச் சார்ந்த இந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதேபோல வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டது.

    மழைக் காலம் என்பதால் இனி பாம்புகள் பொது இடங்களில் உலாவும். பாம்பை பார்த்தால் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • நீண்ட நேரம் போராடி பிடித்தனர்
    • காப்புகாட்டில் விட்டனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் ரோட்டில் உள்ள கொத்தகோட்டை என்ற இடத்தில் ரோட்டையொட்டியுள்ள ஒரு கிணற்றில் சுமார் 8 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தது.

    அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றில் சத்தம் கேட்டு கிணற்றை எட்டி பார்த்தனர்.

    அப்ேபாது கிணற்றில் 8 அடி நீளமுள்ள நாக பாம்பு தத்தளித்து கொண்டிருந்ததை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை பிடித்து பத்திரமாக மீட்டு காப்புகாட்டில் விட்டனர்.

    • தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • வீட்டினுள் பாம்பு வந்ததால் அச்சமடைந்தனர்

    அணைக்கட்டு:-

    ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலா. இவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது.

    இதனை கவனிக்காத கலா வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கலா வீட்டினுள் பாம்பு ஊர்ந்து சென்றதை திடீரென பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் வீட்டில் புகுந்த நாகபாம்பை பிடித்து அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

    ×