search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் 8 அடி நீள நாகபாம்பு மீட்பு
    X

    கிணற்றில் 8 அடி நீள நாகபாம்பு மீட்பு

    • நீண்ட நேரம் போராடி பிடித்தனர்
    • காப்புகாட்டில் விட்டனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் ரோட்டில் உள்ள கொத்தகோட்டை என்ற இடத்தில் ரோட்டையொட்டியுள்ள ஒரு கிணற்றில் சுமார் 8 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தது.

    அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றில் சத்தம் கேட்டு கிணற்றை எட்டி பார்த்தனர்.

    அப்ேபாது கிணற்றில் 8 அடி நீளமுள்ள நாக பாம்பு தத்தளித்து கொண்டிருந்ததை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை பிடித்து பத்திரமாக மீட்டு காப்புகாட்டில் விட்டனர்.

    Next Story
    ×