வீட்டில் புகுந்த நாகபாம்பு

தீயணைப்பு துறையினர் மீட்டனர்வீட்டினுள் பாம்பு வந்ததால் அச்சமடைந்தனர்
வீட்டினுள் நுழைந்த நாகபாம்பை படத்தில் காணலாம்.
வீட்டினுள் நுழைந்த நாகபாம்பை படத்தில் காணலாம்.
Published on

அணைக்கட்டு:-

ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலா. இவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது.

இதனை கவனிக்காத கலா வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கலா வீட்டினுள் பாம்பு ஊர்ந்து சென்றதை திடீரென பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் வீட்டில் புகுந்த நாகபாம்பை பிடித்து அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com