search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல வாரியம்"

    • அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
    • ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பகண்டை கூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் தனியார் கார், ஆட்டோ, வேன் டிரைவர்கள் கலந்து கொண்டு அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். முகாமில் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், சாமி சுப்பிரமணியன், கே.அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர்கள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழில்க ளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்கு படுத்தவும் அவர்களுக்கு சமூகபாதுகாப்பு அளிக்க வும், தமிழ்நாடு அரசு 1982-ஆம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலா ளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறை படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.

    அதன்படி தமிழ்நாடு அரசின் கீழ் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் உட்பட 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரி யங்கள் செயல்பட்டு வருகிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்க ளுக்கான தனி நலவாரியமாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவா ரியம் அமைக்கப்பட்டு 1.1.2021 முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    மேற்படி 18 அமைப்பு சாரா தொழிலாளர் நலவா ரியங்களின் நலத்திட்டங்கள் முறையே கல்வி உதவித்தொ கை, திருமண உதவித்தொ கை, மகப்பேறு உதவித்தொ கை, கண்கண்ணாடி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொ கை, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை, விபத்து ஊன உதவித்தொ கை, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்களுக் கான உதவித்தொகைகள் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களின் மூலம் செயல்படுத்தப்படு கிறது.

    பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில், பணிபுரியும் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களை உடனடியாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழி லாளர் நலவாரியத்தில் கட்டாயமாக உறுப்பினராக சேர்க்குமாறு வேலை யளிப்ப வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தர விட்டுள்ளார்.

    தற்போது மேற்படி வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகைரூ.2 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

    மேலும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் உற்பத்தியாளர்கள் தங்களிடம் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு பங்களிப்புத் தொகை ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலாரூ.200 வீதம் 'செயலா ளர், தமிழ்நாடு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் என்ற பெயரில் வரைவோலை எடுத்து படிவம் வி-ன் படியான தொழிலாளர் விவரப் பட்டியலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும், இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலா ளர்களை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவா ரியத்தில் உறுப்பினராக சேர்ப்பதற்கு தொழிலாளர் துறையில் tnuwwb.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் பழுது பார்க்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
    • ஓட்டுநர்களுக்காக அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும்.

     பல்லடம் :

    தமிழக நான்கு சக்கர மற்றும் கனரக வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. பல்லடம் பகுதி சங்கத் தலைவர் சக்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜன், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் முனியப்பன், செயலாளர் ஹேன்குமார், பொருளாளர் பார்த்தசாரதி, உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வாகனம் பழுது பார்ப்போருக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதியில் அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் பழுது பார்க்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். பல்லடத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்காக அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ராஜா, துணைச்செயலாளர்கள் முருகன், சுபாகர், மாவட்ட பிரதிநிதி மாரிராஜா, மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தென்னை நல வாரியம் மீண்டும் அமைக்க வேண்டும்.
    • மதிப்பு கூட்டிய தென்னை பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில், முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது தென்னை நல வாரியம் அமைக்கப்பட்டது. தற்போது ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனையாகிறது.அதற்கு பதிலாக தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.

    தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தென்னை நல வாரியம் மீண்டும் அமைக்க வேண்டும். காங்கயம் தென்னை வர்த்தக நகராக உள்ளது. தென்னைக்கு இங்கு நிரந்தர கண்காட்சி மையம் அமைக்க வேண்டும். மதிப்பு கூட்டிய தென்னை பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

    ×