search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Labor and Welfare Board"

    • தொழிலாளர்கள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழில்க ளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்கு படுத்தவும் அவர்களுக்கு சமூகபாதுகாப்பு அளிக்க வும், தமிழ்நாடு அரசு 1982-ஆம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலா ளர்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறை படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.

    அதன்படி தமிழ்நாடு அரசின் கீழ் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் உட்பட 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரி யங்கள் செயல்பட்டு வருகிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்க ளுக்கான தனி நலவாரியமாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவா ரியம் அமைக்கப்பட்டு 1.1.2021 முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    மேற்படி 18 அமைப்பு சாரா தொழிலாளர் நலவா ரியங்களின் நலத்திட்டங்கள் முறையே கல்வி உதவித்தொ கை, திருமண உதவித்தொ கை, மகப்பேறு உதவித்தொ கை, கண்கண்ணாடி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொ கை, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை, விபத்து ஊன உதவித்தொ கை, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்களுக் கான உதவித்தொகைகள் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகங்களின் மூலம் செயல்படுத்தப்படு கிறது.

    பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில், பணிபுரியும் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்களை உடனடியாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழி லாளர் நலவாரியத்தில் கட்டாயமாக உறுப்பினராக சேர்க்குமாறு வேலை யளிப்ப வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தர விட்டுள்ளார்.

    தற்போது மேற்படி வாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகைரூ.2 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

    மேலும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் உற்பத்தியாளர்கள் தங்களிடம் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு பங்களிப்புத் தொகை ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலாரூ.200 வீதம் 'செயலா ளர், தமிழ்நாடு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம் என்ற பெயரில் வரைவோலை எடுத்து படிவம் வி-ன் படியான தொழிலாளர் விவரப் பட்டியலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடும், இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலா ளர்களை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவா ரியத்தில் உறுப்பினராக சேர்ப்பதற்கு தொழிலாளர் துறையில் tnuwwb.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×