search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நந்திதேவர்"

    • சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்.
    • பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள மகாநந்தி தலத்தைச் சுற்றி சுமார் 15 கி.மீ சுற்றளவில் விநாயக நந்தி, கருட நந்தி, சூர்ய நந்தி, சோம நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, பிரம்ம நந்தி, நாக நந்தி ஆகிய நந்திகளுடன் இந்த தல நந்தியையும் சேர்த்து மொத்தம் ஒன்பது நந்தி தலங்கள் அமைந்துள்ளன.

    நந்தி மண்டலம் என்று சொல்லப்படும் அந்த நந்திகளுக்கு நாயகனாக மகாநந்தியில் அமர்ந்துள்ள சிவன் மகாநந்தீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார். பிரம்ம நந்தி, நந்தியால் ரெயில் நிலையம் அருகே உள்ளது. நாக நந்தி நந்தியாலுக்கு மேற்கே உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ளது. சூர்ய நந்தியானது நந்தியாலுக்கு கிழக்கே இருக்கிறது. சிவ நந்தி என்பது நந்தியாலிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள காதமாலா ஏரி அருகே உள்ளது.

    கருட நந்தியானது மகா நந்திக்கு மேற்கேயும், விஷ்ணு நந்தி என்ற கிருஷ்ண நந்தி மகாநந்திக்கு இரண்டு கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன. சோம நந்தி என்பது நந்தியாலுக்கு மேற்கே ஆத்மகூர் அருகிலும், விநாயக நந்தி என்பது மகா நந்தியிலும் அமைந்துள்ளது. காலையில் தொடங்கி, மாலைக்குள் நவ நந்திகளையும் தரிசனம் செய்பவர்கள் இந்த பூமியையே வலம் வந்த பலனை பெறுகிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

     சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்

    சங்கீத ஞானத்தில் சிறந்தவராக குறிப்பிடப்படும் நந்தியை, நடனம் மற்றும் இசைத்துறையில் உள்ளவர்கள் வழிபட்டால் கலையில் உன்னதமான நிலையை அடைவார்கள். அவரை வழிபடுபவர்களுக்கு பக்தியும், நற்குணங்களும் கொண்ட குழந்தைகள் பிறப்பார்கள் என்பதும் ஐதீகமாகும்.

    சகல காரிய சித்தி, உயர்ந்த பதவிகள் மற்றும் அனைத்திற்கும் மேலான முக்தி என்ற ஆன்ம விடுதலையை நந்தி எளிதாக அருளுவார் என்பது ஆன்மிக நம்பிக்கை ஆகும். பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.

    அருகம்புல் மாலையை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி நந்தியை வழிபடுவது, வில்வ இலைகளால் அலங்கரித்து அர்ச்சனைகள் செய்வது, அரிசியில் வெல்லம் கலந்து நிவேதனம் செய்வது ஆகியவை பல நன்மைகளை ஏற்படுத்தும் என்றும் ஆன்மிக சான்றோர் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, நவக்கிரகங்களால் பாதிக்கப்பட்ட ரிஷப ராசியினர் பிரதோஷ காலத்தில் நந்தியை ஆத்மார்த்தமாக வணங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும் என்ற ஜோதிட சூட்சுமத்தை ஜோதிட வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

    • நந்திதேவருக்கு கோபம். ஒருவனை வேடனாகவும், இன்னொருவனை பூனையாகவும் மாற்ற சாபம் கொடுத்தார்.
    • இருவரும் அப்படியே மாறி வில்லிவாக்கம் என்ற கிராமத்தை அடைந்தனர்.

    நந்திகேஸ்வரரின் வேலையாட்கள் மகா காந்தன், காந்தன், சிவபூஜைக்காக பூலோகம் சென்று கொன்றை மலர்களை பறித்துவர சொன்னார் நந்தி.

    பூலோகம் வந்த இருவரும் வேலையை மறந்து நந்தவன நிழலில் படுத்து தூங்கி விட்டனர்.

    நந்திதேவருக்கு கோபம். ஒருவனை வேடனாகவும், இன்னொருவனை பூனையாகவும் மாற்ற சாபம் கொடுத்தார்.

    இருவரும் அப்படியே மாறி வில்லிவாக்கம் என்ற கிராமத்தை அடைந்தனர்.

    பூனையை ஒரு வேடன் துரத்தினான்.

    பயந்து ஓடிய பூனை அருகிலிருந்த சிவன் கோவிலுக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிக் கொண்டது.

    வேடனின் அம்பு சிவலிங்கம் மீது பட்டு ரத்தம் கொட்டியது. பூனை பயந்து தீர்த்த குளத்துக்கு ஓடியது.

    சிவனை காயப்படுத்தி விட்டோமே என்று கவலை அடைந்த வேடனும் தீர்த்தத்தில் நீராடி சிவனிடம் மன்னிப்பு கேட்க வந்தான்.

    ஒரே சமயத்தில் வேடன் ஒரு பக்கம், பூனை ஒரு பக்கம் குளத்தில் மூழ்கி எழுந்திருக்க.,

    இருவரும் மீண்டும் மகாகாந்தன், காந்தன் ஆக மாறினார்.

    சிவராத்திரி தினமான அந்நாளில் இறைவனுக்கு பூ, பழங்களை படைத்து வணங்கினார்.

    ×