என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நடிகை நமீதா"
- விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி.
- கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்.
அவினாசி:
நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா இன்று காலை திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் யாராவது மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா? மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் இந்தியா முழுவதும் வீடு கொடுத்துள்ளது. வீடு மட்டுமல்லாமல் குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது.
தி.மு.க., 243 தொகுதிகளில் மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டுள்ளார். தி.மு.க., மக்களை பிரித்தாலும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.
காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ அது போல இந்தியா கூட்டணியில் கட்சிகள் சேர்ந்துள்ளது. இருப்பினும் அவர்களால் மோடி என்னும் பெரும் மனிதரை தோற்கடிக்க முடியாது.
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி. திறமையான போட்டியாளர் உருவாவதாக நினைக்கிறோம். கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று நல்ல ஒரு நடவடிக்கையை மேற்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.
- இணை பொருளாளர் ரவிக்குமார் உள்பட மாவட்ட, மண்டல அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் கோப்பை மின்னொளி கிரிக்கெட் போட்டி திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள எஸ்.ஏ.கே. விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செய லாளர் ஏ.பி.முருகானந்தம் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் சின்னச்சாமி, செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மாநகராட்சி கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ், மாவட்ட பொருளாளர் நடராஜ், இணை பொருளாளர் ரவிக்குமார் உள்பட மாவட்ட, மண்டல அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, டாஸ் போட்டு முதல் போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் நமீதா கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக் கிணங்க பந்து வீசியும், பேட்டிங் செய்தும் கலக்கினார். இந்த போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
பின்னர் நிருபர்களிடம் நமீதா கூறியதாவது:- மாவட்ட, மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகள் குடும்பமாக இந்த நிகழ்ச் சியை நடத்துகின்றனர். இந்த போட்டிக்கான அழைப்பிதழை பார்த்த பிறகு தான் இதில் 4 பெண்கள் அணிகள் கலந்து கொள்கின்றனர் என்று எனக்கு தெரிந்தது. உடனடியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் நான் எப்போதுமே பெண்களுக்கு உறுதுணை யாக இருப்பேன் என்றார். கர்நாடகா தேர்தல் தோல்வி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ஒருசில நேரங்களில் இதுபோன்று தோல்விகளை சந்திக்க நேரிடும். பா.ஜ.க. குறித்து பலர் பலர்விதமாக பேசுவார்கள். ஆனால் பா.ஜ.க. தலைவர்களை பொறுத்தவரை நேர்மறை சிந்தனையுடன் மட்டுமே செயல்படுவார்கள். எதிர்காலத்தில் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்