என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி மர்ம சாவு"

    • மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை சேர்ந்தவர் பிரதாப் (வயது 34), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் பிரதாப் தனது குடும்பத்தினரை பணிந்து, வேப்பங்குப்பத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். கள்ள காதலிக்கும், பிரதாப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ஊசூர் அருகே உள்ள ரெண்டேரிகொடி ஏரியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் மர்ம சாவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்களம் கிராமம்.
    • பொது கிணற்றில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதை ஊர் மக்கள் கண்டு ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

     ஏற்காடு:

    ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்களம் கிராமம். இங்கு 30 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதை ஊர் மக்கள் கண்டு ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறந்து கிடந்த நபரின் உடலை ஊர்மக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் விசாரித்ததில் இறந்து கிடந்தவர் அதே கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி வரதன் என்பவரது மகன் ஆறுமுகம் என்பது உறுதியானது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இவரை யாராவது கொலை செய்யும் நோக்கத்தில் கிணற்றில் தள்ளி விட்டனரா அல்லது கால் தவறி ஆறுமுகம் கிணற்றில் விழுந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சவுதி அரேபியாவில் முசிறி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • உடலை மீட்டு வர மனைவி கண்ணீர் மனு

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி சித்தாம்பூர் காவேரி பாளையம் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் புரவியான் (வயது 48). இவர் கடந்த சில ஆண்டுகளாக அரபு நாடுகளில் வெல்டிங் வேலை செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா சென்ற அவர் அங்குள்ள உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்த நிலையில் கடந்த 8 தேதி அவர் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஒரு ஊழியர் புரவியானின் மனைவி அன்னக்கிளியை தொடர்பு கொண்டு, உங்களது கணவர் மாயமாகிவிட்டதாக தெரிவித்தார். பின்னர் நேற்றைய தினம் காலை உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் நேற்று நள்ளிரவு புரவியான் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதை அடுத்து அன்னக்கிளி தனது மகள் நிவேதாவுடன் திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், கணவர் சாவில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கணவர் இறந்து விட்டதாக தகவல் வந்துள்ளது. கணவர் உடலை மீட்டுத் தந்து எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×