என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சவுதி அரேபியாவில் முசிறி தொழிலாளி மர்ம சாவு
- சவுதி அரேபியாவில் முசிறி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- உடலை மீட்டு வர மனைவி கண்ணீர் மனு
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி சித்தாம்பூர் காவேரி பாளையம் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் புரவியான் (வயது 48). இவர் கடந்த சில ஆண்டுகளாக அரபு நாடுகளில் வெல்டிங் வேலை செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா சென்ற அவர் அங்குள்ள உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 8 தேதி அவர் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஒரு ஊழியர் புரவியானின் மனைவி அன்னக்கிளியை தொடர்பு கொண்டு, உங்களது கணவர் மாயமாகிவிட்டதாக தெரிவித்தார். பின்னர் நேற்றைய தினம் காலை உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் நேற்று நள்ளிரவு புரவியான் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து அன்னக்கிளி தனது மகள் நிவேதாவுடன் திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், கணவர் சாவில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கணவர் இறந்து விட்டதாக தகவல் வந்துள்ளது. கணவர் உடலை மீட்டுத் தந்து எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்