search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்கல்வி"

    • தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக கடந்த 10-ந் தேதி முதல் தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுறை பயிற்சி நடைபெற்றது.
    • நிறைவு விழாவையொட்டி மையத்தில் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான ஒரு கண்காட்சியும் நடத்தப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை மகத்துவ மையம் உள்ளது.இந்த மையத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக கடந்த 10-ந் தேதி முதல் தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுறை பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ்-2 வகுப்பில் வேளாண் அறிவியல் பிரிவில் படித்து வருகின்ற மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சியின் போது மாணவர்களுக்கு தென்னை உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்கள் கற்பிக்கபட்டது. மேலும், செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    நிறைவு விழாவையொட்டி மையத்தில் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான ஒரு கண்காட்சியும் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி விவசாயிகளின் தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலையையும் பார்வையிட்டு மாணவர்கள் பல தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டனர்.10 நாள் பயிற்சியின் நிறைவு விழா தளியில் அமைந்துள்ள தென்னை மகத்துவ மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மேலாளர் கு.ரகோத்துமன் தலைமை தாங்கினார்.ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்தமைக்கு மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

    பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சியாளர் ஹேமலதா தனது அனுபங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். முடிவில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விவசாய ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். 

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்கள் பெறப்பட்டது.
    • மாணவி ஒருவருக்கு தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நட வடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 மாணவிக்கு தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை ரூ. 50,000 காசோலையினை மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 13 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு அடையாள அட்டையினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிளஸ் 1ல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.
    • ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தொழிற்கல்வி பாடப்பிரிவு முடிவு.

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பிளஸ்-1, பிளஸ்-2 தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பிறப்பித்த உத்தரவில் 9 அரசு பள்ளி களில் பிளஸ்-1, பிளஸ்-2 தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூட வேண்டும். அவற்றில் மாணவர்களை சேர்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் ஏற்கனவே மாணவர்களை சேர்த்திருந்தால் அந்த சேர்க்கையை ரத்து செய்து மாணவர்களை வேறு பாடப்பிரிவுகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில், குருவி குளம், தென்காசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாவூர்சத்திரம், புளியங்குடி, புல்லுக்காட்டு வலசை, கரிவலம் வந்த நல்லூர், திருமலாபுரம், ஆய்குடி ஆகிய பள்ளிகளில் அக்கவுண்டிங் மற்றும் ஆடிட்டிங், வேளாண்மை, அறிவியல், டெக்ஸ் டைல்ஸ் போன்ற தொழிற்பாடப் பிரிவுகள் மூடப்படுகின்றன.

    ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினாலும் இந்த கல்வி ஆண்டில் சிலர் ஓய்வு பெறுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பள்ளிகளில் 11 தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளை மூட வேண்டும் என அம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி அரசு பள்ளியில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவு மூடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் இந்த நடவடிக்கையால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் 9-ம் வகுப்பில் அறிமுகம் செய்த தொழிற்பிரிவு பாடங்களையும் ரத்து செய்திருப்பதாக தகவல் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொழிற்கல்வியில் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்பட்டன. அவற்றையும் ரத்து செய்துள்ளது.

    ×