search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vocational education"

    • தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக கடந்த 10-ந் தேதி முதல் தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுறை பயிற்சி நடைபெற்றது.
    • நிறைவு விழாவையொட்டி மையத்தில் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான ஒரு கண்காட்சியும் நடத்தப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை மகத்துவ மையம் உள்ளது.இந்த மையத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பாக கடந்த 10-ந் தேதி முதல் தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுறை பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ்-2 வகுப்பில் வேளாண் அறிவியல் பிரிவில் படித்து வருகின்ற மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சியின் போது மாணவர்களுக்கு தென்னை உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்கள் கற்பிக்கபட்டது. மேலும், செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    நிறைவு விழாவையொட்டி மையத்தில் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான ஒரு கண்காட்சியும் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி விவசாயிகளின் தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலையையும் பார்வையிட்டு மாணவர்கள் பல தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டனர்.10 நாள் பயிற்சியின் நிறைவு விழா தளியில் அமைந்துள்ள தென்னை மகத்துவ மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மேலாளர் கு.ரகோத்துமன் தலைமை தாங்கினார்.ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்தமைக்கு மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

    பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சியாளர் ஹேமலதா தனது அனுபங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். முடிவில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விவசாய ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். 

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்கள் பெறப்பட்டது.
    • மாணவி ஒருவருக்கு தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நட வடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 மாணவிக்கு தொழிற்கல்வி பயின்று வருவதற்கான உதவித்தொகை ரூ. 50,000 காசோலையினை மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 13 திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு அடையாள அட்டையினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பயிறசி வாகனம் இன்று முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் ஒரு பள்ளி என மொத்தம் 15 அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
    • வாகனத்தில் தொழில்கல்வி பயிற்சிக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள், சொட்டுநீர் பாசன கருவி, சோலார் கருவி, மெக்கானிக் கல்விக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு ஆணையம், பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இடையே தொழில் கல்விக்கான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்கில்ஸ் ஆன் வீல்ஸ் என்ற நடமாடும் பயிற்சி வாகன சேவை தொடங்கப்பட்டது.

    கலெக்டர் தொடங்கிவைத்தார்

    கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதனை கலெக்டர் விஷ்ணு, செய்தி மக்கள் தொடர்புதுறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை தலைமை செயலாளர் மகேசன் காசிராஜன்ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தொழிற் பயிற்றுனர்கள் கணேஷ், ராஜேஷ், திறன்மேம்பாட்டு உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்கிலின், செய்தி மக்கள் தொடர்புதுறை அலுவலர் ஜெயஅருள்பதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த வாகனத்தில் தொழில்கல்வி பயிற்சிக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள், சொட்டுநீர் பாசன கருவி, சோலார் கருவி, மெக்கானிக் கல்விக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனம் இன்று முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் ஒரு பள்ளி என மொத்தம் 15 அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தொழில் கல்வி பயிற்றுநர்களும் வாகனத்தில் செல்வார்கள். முதற்கட்டமாக இந்த வாகனம் இன்று டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் பள்ளிக்கு சென்றது. அதனுடன் தொழிற்கல்வி பயிற்றுனர்களும் சென்றனர். இது குறித்து கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை இணைந்து இந்த புதிய முயற்சியை தொடங்கி உள்ளோம். குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் இந்த வாகனம் ஏற்பாடு செய்துள்ளோம். எதிர்காலத்திலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    மாநகராட்சி பள்ளிகளில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பணம் ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நான் முதல்வன் திட்டத்திலும் விரைவில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அரசு பள்ளியில் கொரோனாவுக்கு பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பது குறித்து கேட்டபோது, அரசு பள்ளியில் குறிப்பாக தொடக்க பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது. நல்ல வழியில் அரசு பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

    ×