search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொற்று பரவும் அபாயம்"

    • தரும்புரியில் சாலையில் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நெசவாளர் காலனி உள்ளது. இதன் அருகே சேலம்- தருமபுரி முக்கிய சாலையான நேதாஜி பைபாஸ் சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி கழிவுநீர் கால்வாய் செல்கிறது இந்த கழிவு நீர் கால்வாயில் நெசவாளர் காலனி பகுதியில் இருந்து வரும் கழிவுநீரும் சேர்ந்து 4 ரோடு வரை கழிவு நீர் கால்வாய் செல்கிறது.

    இந்த நிலையில் நெசவாளர் காலனி அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முன்பு கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு நேதாஜி பைபாஸ் சாலையான முக்கிய சாலையில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சிறு மழைக்கே கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது நேதாஜி பைபாஸ் சாலையில் 4 ரோடு வரை ஒரு கிலோமீட்டருக்கு செல்கிறது. பெருமழை வரும்போது நேதாஜி பைபாஸ் சாலையில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து ஆறு போல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது மட்டுமின்றி நோய் தொற்றுக்கும் ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து நாளிதழ்களில் பலமுறை செய்தி வெளியிட்டும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தருமபுரி நகரப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் முக்கிய சாலையில் மழைக்கா லங்களில் கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதை வருட கணக்கில் கண்டும் காணாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் உடனடியாக நேதாஜி பைபாஸ் சாலை இரு புறமும் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என தொற்று நோய் நிபுணர் எச்சரித்து உள்ளார்.
    • ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாக கண்டறிப்பட்டு உள்ளது.

    பீஜிங்:

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது. தொடர்ந்து அந்த கொரோனா அரக்கன் உருமாறி பொதுமக்களை பாடாய் படுத்தியது.

    இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு தற்போது தான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்த போதிலும் கொரோனா முழுமையாக நம்மை விட்டு அகலவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறிப்பட்டு உள்ளது.

    இந்த தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் சில தொற்று நோய் நிபுணர்கள் இதை மறுத்து உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வைரஸ் பரவும் என்பதை ஏற்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் பரவலை தடுத்து விடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    • சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடுகிறது
    • கீரணத்தத்தில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் ஈடுபட்டனர்.

    சரவணம்பட்டி,

    கோவை கீரணத்தம் ஊராட்சியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் 4 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.

    குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அங்குள்ள செடிகளுக்கு நீர் உபயோகப்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் 4 மின் மோட்டார்களும் பழுந்தடைந்து விட்டன. இதனால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் கழிவு நீரை குடிசை மாற்று வாரியத்தின் பணியாளர்கள் சாலையில் திறந்து விடுகின்றனர்.

    இதனால் சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

    மேலும் அருகே உள்ள லட்சுமி கார்டன் நகர் வரை இந்த கழிவு நீரின் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தொற்று நோயால் பாதிக்கும் சூழல் உள்ளது.

    இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் சரவணம்பட்டி-கீரணத்தம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு

    விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது குடிசை மாற்று வாரியத்தில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சியும், கீரணத்தம் ஊராட்சியும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை.

    இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் குப்பை கொட்டுவதற்கு கூட குப்பை தொட்டி வைக்காமல் அவர்கள் சாலை ஓரங்களிலேயே குப்பையை வீசி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் அல்லது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி உரிய தீர்வு காணப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத் மக்கள் கலைந்து சென்றனர்.

    ×