search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவணை தொகை"

    • 12-வது தவணை தொகை பெறுவதற்கு பிரதமரின் கிசான் திட்டத்தில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
    • eKYC எனப்படும் ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைக்க விவசாயிகள் கோரப்பட்டுள்ளனர்.

    முதுகுளத்தூர்

    நமது நாட்டில் விவசாயிகள் விவசாயம் செய்யத் தேவையான முக்கியமான இடு பொருட்களை தற்சார்புடன் வாங்குவதற்கு உதவிட பிரதமரின் கவுரவ நிதி உதவித்திட்டம் 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம், 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 11 தவணைகள் பணம் வரவு வைக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பணப் பரிமாற்றத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் நடப்பு 12-வது தவணைத் தொகையை பெறுவதற்கு அரசு சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.

    அதனடிப்படிடையில் தற்போது eKYC எனப்படும் ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைக்க விவசாயிகள் கோரப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் பயன் பெறும் அனைத்து விவசாயிகளும் நில உடைமைப்பட்டா, ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களையும் பிரதமரின் கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக அவற்றை வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    12-வது தவணை பணப்பலன் பெற கட்டாயம் இந்த இரு வழி முறைகளையும் விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்றும், வருகிற 31-ந் தேிக்குள் இந்த இரு நடை முறைகளையும் விவசாயிகள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

    • மத்திய அரசு ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விவசாயிகளுக்கான கவுரவ நிதி வழங்கல் திட்டத்தில் வேளாண்மை இடு பொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவ ணைகளாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. இதுவரை பதிவு செய்த விவ சாயிகளுக்கு 11 தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. தற் போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எனவே பயனாளிகளின் நில ஆவணங்கள் "தமிழ் நிலம்" இணையதளத்துடன் இணைக்கப்பட்டு சரிபார்ப்பு பணி நடைபெற்று வரு கிறது. எனவே இந்த ஊக்கத்தெகை பெற்று வரும் விவசாயிகள் அனைவரும் தாமாகவே முன்வந்து நில ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் ஆதார் நகல்) அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் வேளாண் விற்பனை, வேளாண் வணிகம் அலுவலகத்தில் காண்பித்து வருகிற 31-ந் தேதிக்கு முன்னரே சரி செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் இத்திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் இத்திட்ட விவசாயிகள் அனைவரும் தங்க ளது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதோடு, பி.எம்.கிசான் வலைதளத்தில் இ-கே-ஒய்.சி. பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×