search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "norms"

    • போலீசார் முன்னிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது பயணிகள் புகார் அளித்தனர்.
    • விதிகளை மீறிச்செல்வதை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.

    மதுரை

    மதுரை சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக விளங்கி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்யப் பட்டுள்ளன. இருந்த போதிலும் போக்குவரத்தில் இன்னும் பின்தங்கியே இருக்கிறது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் சிக்னல் அமைந்துள்ளது. அதன் அருகில் போலீசார் கண்காணிக்கும் இடம் உள்ளது. இந்த நிலையில் சிக்னல் பகுதியில் வரும் பல வாகனங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் சிவப்பு விளக்கு எரியும் போதும் நிற்காமல் செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சாலை யை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    ஒரு சில நேரங்களில் மட்டுமே போலீசார் சிக்னல் பகுதியில் நின்று வாகனங்கள் விதிமுறை மீறலை தடுக்கின்றனர். பல நேரம் வாகனங்கள் விதிகளை மீறிச் செல்வதை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.

    மேலும் இன்றைய வாகன ஓட்டிகள் பலர் நடந்து செல்பவர்களுக்கு வழி விடும் மனநிலை இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் வாகன விதிமுறை மீறல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 12-வது தவணை தொகை பெறுவதற்கு பிரதமரின் கிசான் திட்டத்தில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
    • eKYC எனப்படும் ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைக்க விவசாயிகள் கோரப்பட்டுள்ளனர்.

    முதுகுளத்தூர்

    நமது நாட்டில் விவசாயிகள் விவசாயம் செய்யத் தேவையான முக்கியமான இடு பொருட்களை தற்சார்புடன் வாங்குவதற்கு உதவிட பிரதமரின் கவுரவ நிதி உதவித்திட்டம் 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம், 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 11 தவணைகள் பணம் வரவு வைக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பணப் பரிமாற்றத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் நடப்பு 12-வது தவணைத் தொகையை பெறுவதற்கு அரசு சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது.

    அதனடிப்படிடையில் தற்போது eKYC எனப்படும் ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைக்க விவசாயிகள் கோரப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் பயன் பெறும் அனைத்து விவசாயிகளும் நில உடைமைப்பட்டா, ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களையும் பிரதமரின் கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக அவற்றை வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    12-வது தவணை பணப்பலன் பெற கட்டாயம் இந்த இரு வழி முறைகளையும் விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்றும், வருகிற 31-ந் தேிக்குள் இந்த இரு நடை முறைகளையும் விவசாயிகள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

    ×