search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலீபான்"

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான் பிரதிநிதிகளிடையே புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது. #Pakistan #Taliban
    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை ஏற்படுத்தும் விதமாக தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இதற்கு தலீபான்களும் சம்மதித்தனர்.

    அதன்படி கடந்த மாதம் இறுதியில் கத்தார் தலைநகர் தோகாவில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆப்கன் விவகாரத்தில் தீர்வுகாண ஒரு ஒப்பந்தத்தை கட்டமைக்க இரு தரப்பும் ஒப்புதல் அளித்தன. அதே சமயம் குறிப்பிடத்தக்க வகையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

    இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான் பிரதிநிதிகளிடையே புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண நிலைக்கு தீர்வு காண்பது மற்றும் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்ப பெறுவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது.
    ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷியா நடத்திய கூட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்றாலும், தலீபான்களுடன் இந்தியா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #India #Taliban #FederalGovernment
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. ஆனால் தொடர்ந்து 18 ஆண்டுகளாக அங்கு உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. பல பகுதிகள் இன்னும் தலீபான்கள் ஆதிக்கத்தின்கீழ்தான் உள்ளன. அவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதால் அந்த நாட்டின் மறுசீரமைப்பு பணிகள் பாதித்து உள்ளன. இந்தநிலையில் மாஸ்கோவில் ஒரு கூட்டம் நடத்தி, அதில் தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை ரஷியா வெளியிட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் பல நாடுகள் தயக்கம் காட்டின. அமெரிக்காவும், ஆப்கானிஸ்தான் அரசும் இதில் பங்கேற்க மறுத்து விட்டன.

    இருப்பினும் மாஸ்கோவில் இந்த கூட்டம் நேற்று நடந்தது. ஈரான், சீனா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகளுடன் தலீபான்களும், ஆப்கானிஸ்தான் உயர் அமைதி கவுன்சில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்தியாவும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்து கொண்டது. இந்தியாவின் சார்பில் ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் தூதர் அமர்சின்காவும், பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதர் டி.சி.ஏ.ராகவனும் கலந்து கொண்டனர். இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த கூட்டத்தில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் பேசும்போது, “ஆப்கானிஸ்தான் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவதில், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என கூறினார்.

    ரஷிய கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு தொடர்பாக மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தலீபான்களுடன் இந்தியா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    ரஷிய கூட்டத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் கலந்து கொள்வது என்பது மத்திய அரசு எடுத்த முடிவு ஆகும். இந்த அளவில் பங்கேற்பதற்கு எதற்காக முடிவு செய்யப்பட்டது என்பது குறித்த விளக்கத்திற்குள் நான் உண்மையிலேயே செல்ல முடியாது.

    தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக நாங்கள் எங்கே கூறினோம்? நாங்கள் அவ்வாறு சொல்லவே இல்லை. ரஷியா நடத்துகிற ஒரு கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று மட்டுமே சொன்னோம். அதிகாரபூர்வமற்ற முறையில் அதில் கலந்து கொள்வது என முடிவு எடுத்திருக்கிறோம் என்றுதான் சொன்னோம்.

    ஒரு முடிவு எடுப்பதில் நிறைய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இந்த முறை, அந்த கூட்டத்தில் நாம் பங்கேற்பது என்பது மத்திய அரசு பரிசீலித்து எடுத்த முடிவு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போர் முடிவுக்கு கொண்டு வர தலீபான் அமைப்பின் முன்னாள் தலைவர்களும், அமெரிக்க அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக அரசு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான்களை நேரடி பேச்சு நடத்த வருமாறு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி அழைப்பு விடுத்தார். ஆனால் அமெரிக்காவுடன் மட்டுமே நேரடி பேச்சு நடத்த விரும்புவதால், ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்புக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. அந்த வகையில் கத்தாரிலும், ஆப்கானிஸ்தானிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தலீபான் அமைப்பின் முன்னாள் தலைவர்களும், அமெரிக்க அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.

    கத்தார் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஒருவர் இதுபற்றி குறிப்பிடுகையில், “கத்தார் நாட்டின் தோஹா நகரில் உள்ள ஓட்டலில் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை ஓட்டலுக்குள்ளும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தது. ஓட்டல் பணியாளர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை” என கூறினார்.

    இதே போன்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தலீபான்கள், அமெரிக்க அதிகாரிகள் சந்தித்து பேச்சு நடத்தியதாக தலீபான் தளபதி ஒருவர் கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, “எங்கள் நிலைப்பாடு தெளிவானது. ஏற்கனவே கூறியதைப்போன்று ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை திரும்பப்பெறப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார். 
    ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தலீபான்களை சமரச பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷரப் கனி அழைத்து உள்ளார். #Afghanistan #AshrafGhani
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். இதுதொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டபோது, தலீபான்கள் வன் முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, “வன்முறையானது, மக்களின் இதயங்களையும், மனங் களையும் கவர்ந்து இழுக்காது. அதற்கு பதிலாக தலீபான் களை தீவு போன்று தனிமைப்படுத்தும். இதை தலீபான்கள் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வருகிற உள்நாட்டுப் போரில், முதல் முறையாக தலீபான்களும் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர்.



    இது வரை இல்லாத வகையில் அந்த 3 நாளில் போர் நிறுத்தம் மீறப்படவில்லை. அதுமட்டுமின்றி, ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலீபான்களும் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி வாழ்த்து கூறினர். பொது மக்களுடனும் தலீபான்கள் ‘செல்பி’ படங்கள் எடுத்து, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆப்கானிஸ்தான் மக் களிடையே இந்த போர் நிறுத்தம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று முன்தினம் தலீபான்களும், ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர். இந்த சம்பவத்தை தவிர போர் நிறுத்த காலத்தில் அமைதி நிலவியது.

    இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மேலும் 9 நாட்களுக்கு நீட்டித்து அதிபர் அஷரப் கனி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு பற்றி உடனடியாக தலீபான்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு அதிபர் அஷரப் கனி டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறும்போது, “தலீபான்களுடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. தலீபான்கள் முன் வைத்து உள்ள அனைத்து பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து சமரச பேச்சுவார்த்தையின்போது விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

    மேலும் அவர் கூறும்போது, “ரம்ஜான் நிகழ்ச்சியில் தலீபான்களும், அரசு அதிகாரிகளும் ஒன்றாக கலந்து கொண்டது, நாம் அனைவரும் சமாதானத்துக்காகத்தான் உள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது” என்றும் கூறினார்.

    போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பாக டுவிட்டரில் அதிபர் அஷரப் கனி ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார்.

    அதில் அவர், “ஆப்கானிஸ்தான் தலீபான்களும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். போர் நிறுத்தத்தின்போது, காயம் அடைந்த தலீபான்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்போம். தேவையான மனித நேய உதவிகளையும் செய்வோம். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தலீபான்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவும், சந்திக்கவும் அனுமதிக்கப் படும்” என கூறி உள்ளார்.

    இரு தரப்பு சமரச முயற்சிகளை அமெரிக்கா வரவேற்று உள்ளது.

    இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ குறிப்பிடுகையில், “ஆப்கானிஸ்தான் போருக்கு முடிவு கட்டுகிற வகையில், இரு தரப்பினரும் சமரச உடன்பாடு, அரசியல் தீர்வு காண்பதற்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்” என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.  #Afghanistan #AshrafGhani #Tamilnews
    ×