search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக தேர்தல் ஆணையர்"

    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.



    இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி அன்று இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.
    தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். #ByElection2019 #SatyabrataSahoo
    சென்னை:

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. #ByElection2019 #SatyabrataSahoo
    ×