search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை விசாரணை"

    • வாலிபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
    • எதற்காக கொலை செய்யப்பட்டார்? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    விருதுநகர்:

    மானாமதுரையில் இருந்து விருதுநகர் மாவட் டம் புலியூரான் கிராமத்திற்கு இடையே செல்லும் ரெயில் தண்டவாள பகுதியில் தொட்டியங்குளம் என்ற இடத்தில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்தவரின் அருகில் சென்று பார்த்தபோது, அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. மாறாக அவரது உடலில் முகம் மற்றும் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் விருதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் மற்றும் போலீசார் வந்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். பிணமாக கிடந்த வாலிபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.

    இறந்து கிடந்தவர் சிவப்பு நிற சட்டை, பனியன் மற்றும் கைலி அணிந்திருந்தார். சம்பவம் தொடர்பாக புலி யூரான் கிராம நிர்வாக அலுவலர் பவானிதேவி விசாரணை நடத்தி புகார் அளித்தார். அதன்பேரில் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையுண்டவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார்? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது22 ). இவர் சொந்த வேலை காரணமாக விழுப்புரம் சென்று விட்டு கெடிலம் எஸ்.எஸ்.வி பள்ளி வளாகம் வளைவில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தகவல றிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தனி பிரிவு காவலர் மனோகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டு விபத்து ஏற்படுத்த வாகனத்தை தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறார்கள். 

    • கண்காணிப்பு காமிரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
    • இருசம்பவங்கள் குறித்தும் காட்டூர் மற்றும் வெரைட்டிஹால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது


    கோவை

    கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள மாவட்ட பா.ஜனதா அலுவலகம் மற்றும் ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் லட்சுமணன் என்ப வருக்கு சொந்தமான துணிக்கடையில் நேற்று இரவு ஒரே நேரத்தில் மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசி னர்.

    இந்த இருசம்பவங்கள் குறித்தும் காட்டூர் மற்றும் வெரைட்டிஹால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது பா.ஜ.க அலுவலக பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வருவதும், அவர்கள் பெட்ரோல் நிரப்பிய திரியுடன் கூடிய பாட்டிலை பா.ஜ.க அலுவலகத்தின் எதிரே வி.கே.கே.மேனன் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு வீசி விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. ஆனால் அதில் அவர்களின் முகம் தெளிவாக பதிவாக வில்லை.

    இருப்பினும் அவர்கள் வந்த ேமாட்டார் சைக்கிளின் அடையாளத்தை வைத்து அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே ஒப்பணக்கார வீதியில் உள்ள கண்காணிப்பு காமிராவை வெரைட்டிஹால் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது,அதில் 3 பேர் கடையின் மீது பெட்ரோல் குண்டினை வீசி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் மர்மநபர்களின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதனை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கோவையை சேர்ந்த 3 பேரை பிடித்து ெவரைட்டிஹால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்களிடம் எதற்காக பெட்ரோல் குண்டை வீசினீர்கள்? யாருடைய தூண்டுதலின் பேரிலும் இதில் ஈடுபட்டீர்களா? எனவும் அவர்களிடம் விசாரணை மேற்துகொண்டனர்.

    மேலும் இவர்களே பா.ஜ.க அலுவலகம் மீதும் பெட்ரோல் வெடிகுண்டை வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்திலும் அவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×