search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திருட்டு"

    • முறைகேடாக வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறுகள் வெட்டி பாசன நீரை இரண்டுக்கு ஒரு சுற்று என்ற வீதம் நீர் திருடப்பட்டு வருகிறது.
    • கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது முறைகேடாக தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    திருமூர்த்தி அணையில் இருந்து வெள்ளகோவில் வரை 126 கிலோ மீட்டர் நீளம் பி.ஏ.பி. கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்போது முறைகேடாக தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 லாரி அளவு தண்ணீர் திருடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் திருட்டின் மதிப்பை கணக்கிடுகையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1 கோடி வரை நடந்திருக்கலாம். கால்வாயின் மொத்த தூரமான 126 கிலோ மீட்டருக்கும் கணக்கிட்டால் பல கோடி ரூபாய் வரை தண்ணீர் திருட்டு நடந்திருக்க கூடும் என காங்கயம்-வெள்ளகோவில் பி.ஏ.பி. நீர் பாசன சங்க தலைவர் பி.வேலுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் நீர் பாசன சங்கத்தின் மூலம் போடப்பட்ட விதிமுறைகளை தாண்டி பல அடி ஆழத்திற்கு குழாய்கள் அமைத்தும், அதிக திறன் கொண்ட மோட்டார்கள் வைத்தும் கால்வாயில் பாயும் நீரை திருடுகின்றனர். முறைகேடாக வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் கிணறுகள் வெட்டி பாசன நீரை இரண்டுக்கு ஒரு சுற்று என்ற வீதம் நீர் திருடப்பட்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டினார். இது போன்று பல இடங்களில் பல விதமாக தண்ணீர் திருடுவதன் மூலம் கடைமடை விவசாயிகள் தண்ணீரை அனுபவிக்கும் சட்டப்பூர்வ உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நீர் பாசன அதிகாரிகள், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்சாரத் துறை ஆகியோர் சேர்ந்து தண்ணீர் திருட்டை தடுத்து முறையான பாசன நீர் வினியோகம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என கோர்ட்டில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுத்து சமச்சீராக நீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. ேமலும் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் (நீர்வளத்துறை) காங்கயம்- வெள்ளகோவில் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாக பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி., 4 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் உபயோகிக்கப்பட்டு வருகிறது.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி., 4 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது.

    கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய் துறை, காவல் துறை, நீர் வள ஆதாரத்துறை, விவசாயிகள், மின் துறை அதிகாரிகள் போன்ற கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினரும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

    இருந்தாலும் காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருட்டு தொடர்கிறது. பிவிசி., பைப்புகள் கால்வாயில் போட்டு மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் . எனவே தீவிரமாக கண்காணித்து தண்ணீர் திருடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
    • தண்ணீர் திருட்டை ஒழிக்க ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    உடுமலை:

    4-வது மண்டல பாசனத்துக்கு பாலாறு உபவடி நில பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்த திருமூர்த்தி நீர்த்தேக்க குழுவின் பகிர்மான குழு (எண்:7) கூட்டம், பொங்கலூர் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார்.பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர் இருப்பு மற்றும் எதிர்பார்ப்பு நீர்வரத்து மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.

    நாளை 20ந் தேதி முதல், 4வது மண்டல பாசனத்துக்கு நிலுவையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யவும், உயிர் நீராக ஒரு சுற்று தண்ணீர் திறக்க வேண்டும்.மழை பெய்து கூடுதல் நீர் கிடைத்தால் அதற்கு ஏற்ப தண்ணீர் வழங்கலாம். கால்வாயில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது கோவை - திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

    தண்ணீர் திருட்டை ஒழிக்க ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். கிளை கால்வாய்களில் பாசன சங்கங்கள் வாயிலாக சுத்தம் செய்து கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய வேலை உறுதி திட்டத்தில் கால்வாய்களை சுத்தம் செய்ய ஆவண செய்ய வேண்டும்.

    உட்பிரிவு செய்யாத உபகிளை வாய்க்கால்கள் மற்றும் பகிர்வு வாய்க்கால்களை உட் பிரிவு செய்ய மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • என்னுடைய விவசாய கிணற்று அருகே வசிக்கும் ஒரு தரப்பினர் கிணற்றை ஆக்கிரமிக்க முயன்றனர்.
    • எதிர் தரப்பினர் இரவு நேரங்களில் விவசாய கிணற்றிலிருந்து தண்ணீரை திருடி அவர்கள் நிலத்திற்கு பாய்ச்சிகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வடமலை பாளையம் தலுஞ்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி(வயது 87). இவர் தனது மனைவி சிவபாக்கியத்துடன் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியாவை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள வடமலை பாளையம் பகுதியில் எனக்குச் சொந்தமான 1.96 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

    இதில் தென்னை மரங்கள் வளர்த்து விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் என்னுடைய விவசாய கிணற்று அருகே வசிக்கும் ஒரு தரப்பினர் கிணற்றை ஆக்கிரமிக்க முயன்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் எதிர் தரப்பினர் இரவு நேரங்களில் விவசாய கிணற்றிலிருந்து தண்ணீரை திருடி அவர்கள் நிலத்திற்கு பாய்ச்சிகின்றனர். இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுகின்றனர். எனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கிணற்றிலிருந்து தண்ணீரை திருட்டுத்தனமாக எடுப்பதை தடுக்க வேண்டும். மேலும் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டத்திற்கு உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த்கண்ணன் தலைமை வகித்தார்.
    • திருமூர்த்தி அணைக்கு வழங்கப்பட்ட இடம் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    உடுமலை உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த்கண்ணன் தலைமை வகித்தார்.உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை எடுத்துக் கூறி பேசினார்கள். இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் திருமூர்த்திஅணை கட்டப்பட்ட போது பல்வேறு விவசாயிகள் தாமாகவே முன்வந்து நிலத்தை தானமாக வழங்கினார்கள்.இதனால் பாசனத்திற்கு தண்ணீரும் குடிப்பதற்கு குடிநீரும் இன்றளவும் தடையில்லாமல் பெற்று வருகின்றோம். ஆனால் திருமூர்த்தி அணைக்கு வழங்கப்பட்ட இடம் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.அதை தவிர்க்க வேண்டும்.பொதுநல நோக்கோடு வழங்கப்பட்ட அந்த நிலங்களை அணைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மேலும் பிஏபி கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் போது திருட்டு நடைபெற்று வருவது தொடர்கதையாக உள்ளது. அதை தடுப்பதற்கு அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் கடைமடை விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

    உடுமலை பகுதியில் கேபிள் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுவதில்லை. உழவர் சந்தையில் இடம் பற்றாக்குறை காரணமாக வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் உழவர் சந்தைக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். மேலும் தினசரி சந்தையை மேம்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். விவசாயிகள் பொதுமக்கள் அளிக்கின்ற புகார் மனுக்களுக்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை. நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் குறைகளுக்கு தீர்வு காண முடியாமல் பொதுமக்கள் விவசாயிகள் மாதக்கணக்கில் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். தளி பேரூராட்சி பகுதியில் அதிக அளவில் கிராவல் மண் எடுக்கப்பட்டு உள்ளது. முறையான அனுமதி இன்றி எடுத்துச் செல்லப்பட்ட கிராவல் மண் சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால் ஏழை எளிய மக்கள் மண் எடுப்பதற்கு மட்டும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது.

    அமராவதி சர்க்கரை ஆலையில் இளம் சூடு ஏற்றுதல் தாமதமாக நடைபெறுகிறது.கரும்பு அறுவடைக்கு முன்பே பணியை முடித்திருக்க வேண்டும். நடவடிக்கை தாமதம் ஆவதால் கரும்பின் எடை குறைந்து விவசாயிக்கு வருமான இழப்பும் ஏற்படுகிறது.எனவே கரும்பு அரவையை சர்க்கரை ஆலையில் விரைந்து தொடங்க வேண்டும். அதே போன்று நீராதாரங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் நிலவுகிறது. இதனால் மழை காலத்துக்குள் நீராதாரங்கள் ஆழப்படுத்தப்படுவதும் தடுக்கப்படுகிறது. மேலும் நீர் வழித்தடங்கள் மற்றும் நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் உடுமலை பகுதி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கூட்டுக் குடிநீர் திட்டங்களில் நிலவும் குளறுபடிகளால் கடைக்கோடி கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அதுமட்டுமின்றி வேளாண்மை துறை,தோட்டக்கலைத்துறை, பொருளியல் துறை இணைந்த ஒருங்கிணைந்த வேளாண்மை துறை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். இதனால் விவசாயிகள் ஒருங்கிணைந்த சேவையை விரைந்து பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். உடுமலை மடத்துக்குளம் பகுதியில் நில அளவை பிரிவில் அளிக்கின்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் உள்ளது.அதற்கு தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும். மேலும் பொன்னாலம்மன் சோலை பகுதியில் இருந்து குழிப்பட்டி மலைவாழ் கிராமத்திற்கு செல்லும் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.அதை மீட்டு மலைவாழ் மக்கள் சமதள பகுதிக்கு வந்து செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.ஆனால் முகாமுக்கு வருகை தந்திருந்த துறை சார்ந்த அதிகாரிகளில் ஒரு சிலரே குறைகளுக்கு பதில் அளித்தனர்.மற்ற அதிகாரிகள் அலட்சியப் போக்கோடு அமர்ந்து இருந்தனர்.இதனால் விவசாயிகள் பொதுமக்கள் உரிய பதில் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.இந்த கூட்டத்தில் தாசில்தார் கண்ணாமணி, ஆர்.டி.ஓ உதவியாளர் ஜலஜா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சி.செல்லமுத்து மற்றும் எம்.கோவிந்த சாமி ஆகியோருடன் நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
    • நீர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசன வாய்க்கால்கள் வழியாக பாசன நீர் பகிர்ந்தளிக்கபட்டு வருகிறது. தற்போது மூன்றாம் மண்டல பாசனத்திற்கு பி.ஏ.பி., கால்வாய்களிலிருந்து 4-ம் சுற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒருசிலர் இந்த கால்வாய்களில் கரைகளை சேதப்படுத்தி குழாய்கள் அமைத்து கடை மடை விவசாயிகளுக்கு நீர் தட்டுபாட்டை ஏற்படுத்தும் வகையில்நீரை உறிஞ்சி நீர்திருட்டில் ஈடுபடுவதாக புகார் வந்தது.இதைத்தொடர்ந்து பாசன சங்கதலைவர்கள் சி.செல்லமுத்து மற்றும் எம்.கோவிந்த சாமி ஆகியோருடன் நீர் வளத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது உடுமலையிலிருந்து பிரியும் மைவாடி பகிர்மான கால்வாயில் கரைகளை சேதப்படுத்தி பக்கவாட்டில் துளையிட்டு நிரந்தரமாக பி.வி.சி., குழாய்களை அமைத்து ஒரு சிலர் நீர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து நீர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.

    இது குறித்து நீர் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், முறைகேடாக நீர்திருட்டில் ஈடுபட்டோர் மீது புகார் அளிக்கபட்டுள்ளதாகவும் வாய்க்கால் கரைகளை சேதபடுத்தி நீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.  

    • பாசன விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதுடன் நீர் திருட்டு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கலாம்.
    • நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு மிகப்பெரும் சவாலாக உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பி.ஏ.பி., நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான திறனாக்க பயிற்சி முகாம் நடந்தது. திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 32 சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். பி.ஏ.பி., உதவி பொறியாளர்கள் சரவணன், விஜய் தினேஷ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி வல்லுநர் சுரேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    முன்னதாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தாமரை என விவசாயிகளை 5 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு நீர் ஆதாரம், நிதி ஆதாரம், நீர் நிர்வாகம், சங்கத்துக்கும் நீர் வள ஆதார துறைக்கும் இடையிலான தொடர்பு உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துகள் கேட்கப்பட்டன.

    பயிற்சி குறித்து சில விவசாயிகள் கூறியதாவது:-

    மத்திய மாநில அரசு மூலமும், விவசாயிகளின் பங்களிப்பு மூலமாகவும் நிதி ஆதாரம் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு கால கட்டங்களில் தண்ணீர் திருட்டை தடுக்க முடியவில்லை. அதிகாரிகளும், போலீசாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தடுக்கலாம். நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு மிகப்பெரும் சவாலாக உள்ளது.நீர் கண்காணிகள் நிறுவப்பட வேண்டும்.

    ஆக்கிரமிப்பு மற்றும் வாய்க்கால் சேதம் சட்டப்படி குற்றம். இதற்கு, ஜாமீன் இல்லாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் போலீஸ் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை.பாசன விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதுடன் நீர் திருட்டு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கலாம். இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

    • அமராவதி அணை வாயிலாக 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • நீர் திருட்டு காரணமாக வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கிறது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி அணையில் துவங்கும் ஆறு 148 கி.மீ., தூரம் பயணம் செய்து காவிரி ஆற்றில் திருமுக்கூடலூர் பகுதியில் கலக்கிறது. அமராவதி ஆறு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையாக உள்ளதோடு கரூர் மாவட்டத்திற்கும் பயன் அளிக்கிறது.

    பாசன பரப்பு மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள நிலையில் ஆற்றில் பாசன பகுதி இல்லாத நிலங்களுக்கும், வணிக ரீதியாகவும், தொழிற்சாலை பயன்பாடு என எந்த விதமான அனுமதியின்றி, முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது.வழியோரத்தில், ஆற்றின் இரு புறமும், நூற்றுக்கணக்கான மின் மோட்டார்கள் அமைத்து தண்ணீர் திருடப்படுகிறது. நீர் திருட்டு காரணமாக, கோடை காலங்களில் கடும் வறட்சியும், வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கிறது.அணை துவங்கி, கரூர் வரை, பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில் 3 போகம் நெல் சாகுபடி செய்து வந்த நிலையில், நீர் திருட்டு பிரதானமாக மாறியுள்ளதால் ஒரு போக சாகுபடியாக குறைந்ததோடு, கடை மடை பகுதிகளில், ஒரு போக சாகுபடி கூட எடுக்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

    நீர் திருட்டை தடுக்க, திருப்பூர், திண்டுக்கல், கரூர் மாவட்ட நிர்வாகங்கள் முன் வர வேண்டும் என அமராவதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×