search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திருட்டு - விவசாயிகள் புகார்
    X

    கோப்புபடம்.

    அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திருட்டு - விவசாயிகள் புகார்

    • அமராவதி அணை வாயிலாக 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • நீர் திருட்டு காரணமாக வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கிறது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி அணையில் துவங்கும் ஆறு 148 கி.மீ., தூரம் பயணம் செய்து காவிரி ஆற்றில் திருமுக்கூடலூர் பகுதியில் கலக்கிறது. அமராவதி ஆறு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையாக உள்ளதோடு கரூர் மாவட்டத்திற்கும் பயன் அளிக்கிறது.

    பாசன பரப்பு மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள நிலையில் ஆற்றில் பாசன பகுதி இல்லாத நிலங்களுக்கும், வணிக ரீதியாகவும், தொழிற்சாலை பயன்பாடு என எந்த விதமான அனுமதியின்றி, முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது.வழியோரத்தில், ஆற்றின் இரு புறமும், நூற்றுக்கணக்கான மின் மோட்டார்கள் அமைத்து தண்ணீர் திருடப்படுகிறது. நீர் திருட்டு காரணமாக, கோடை காலங்களில் கடும் வறட்சியும், வழியோர கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கிறது.அணை துவங்கி, கரூர் வரை, பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில் 3 போகம் நெல் சாகுபடி செய்து வந்த நிலையில், நீர் திருட்டு பிரதானமாக மாறியுள்ளதால் ஒரு போக சாகுபடியாக குறைந்ததோடு, கடை மடை பகுதிகளில், ஒரு போக சாகுபடி கூட எடுக்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

    நீர் திருட்டை தடுக்க, திருப்பூர், திண்டுக்கல், கரூர் மாவட்ட நிர்வாகங்கள் முன் வர வேண்டும் என அமராவதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×