search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே தண்ணீர் திருட்டை தடுக்க கோரி மனு
    X

    கோப்புபடம்

    பல்லடம் அருகே தண்ணீர் திருட்டை தடுக்க கோரி மனு

    • என்னுடைய விவசாய கிணற்று அருகே வசிக்கும் ஒரு தரப்பினர் கிணற்றை ஆக்கிரமிக்க முயன்றனர்.
    • எதிர் தரப்பினர் இரவு நேரங்களில் விவசாய கிணற்றிலிருந்து தண்ணீரை திருடி அவர்கள் நிலத்திற்கு பாய்ச்சிகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வடமலை பாளையம் தலுஞ்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி(வயது 87). இவர் தனது மனைவி சிவபாக்கியத்துடன் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியாவை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள வடமலை பாளையம் பகுதியில் எனக்குச் சொந்தமான 1.96 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

    இதில் தென்னை மரங்கள் வளர்த்து விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் என்னுடைய விவசாய கிணற்று அருகே வசிக்கும் ஒரு தரப்பினர் கிணற்றை ஆக்கிரமிக்க முயன்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் எதிர் தரப்பினர் இரவு நேரங்களில் விவசாய கிணற்றிலிருந்து தண்ணீரை திருடி அவர்கள் நிலத்திற்கு பாய்ச்சிகின்றனர். இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுகின்றனர். எனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கிணற்றிலிருந்து தண்ணீரை திருட்டுத்தனமாக எடுப்பதை தடுக்க வேண்டும். மேலும் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×