search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் திருட்டை தடுக்க  ஐகோர்ட்டு  உத்தரவை அமல்படுத்த வேண்டும் - திருமூர்த்தி நீர்த்தேக்க குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    தண்ணீர் திருட்டை தடுக்க ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும் - திருமூர்த்தி நீர்த்தேக்க குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

    • குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
    • தண்ணீர் திருட்டை ஒழிக்க ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    உடுமலை:

    4-வது மண்டல பாசனத்துக்கு பாலாறு உபவடி நில பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்த திருமூர்த்தி நீர்த்தேக்க குழுவின் பகிர்மான குழு (எண்:7) கூட்டம், பொங்கலூர் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார்.பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர் இருப்பு மற்றும் எதிர்பார்ப்பு நீர்வரத்து மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.

    நாளை 20ந் தேதி முதல், 4வது மண்டல பாசனத்துக்கு நிலுவையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யவும், உயிர் நீராக ஒரு சுற்று தண்ணீர் திறக்க வேண்டும்.மழை பெய்து கூடுதல் நீர் கிடைத்தால் அதற்கு ஏற்ப தண்ணீர் வழங்கலாம். கால்வாயில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது கோவை - திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

    தண்ணீர் திருட்டை ஒழிக்க ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். கிளை கால்வாய்களில் பாசன சங்கங்கள் வாயிலாக சுத்தம் செய்து கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய வேலை உறுதி திட்டத்தில் கால்வாய்களை சுத்தம் செய்ய ஆவண செய்ய வேண்டும்.

    உட்பிரிவு செய்யாத உபகிளை வாய்க்கால்கள் மற்றும் பகிர்வு வாய்க்கால்களை உட் பிரிவு செய்ய மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×