search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுத்து நிறுத்தம்"

    • போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைக்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் பகுதியில் சுமார் 10 அடி விநாயகர் சிலை நிறுவப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது.

    இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மினி ஆட்டோ வில் விநாயகர் சிலையுடன் மேள தாளங்கள் முழங்க போலீஸ் நிலையம் அருகே 300-க்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது போலீசார் அவர்களை நிறுத்தி முன் அனுமதி இல்லாமல் வந்து உள்ளீர்கள். நாளை (வெள்ளிக்கிழமை) தான் புஞ்சை புளியம்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் எந்தவித முன்அனுமதி இன்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்துள்ளீர்கள். இதற்கு அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதை தொடர்ந்து விநாயகர் சிலை ஆற்றில் கரைக்க எடுத்து செல்கிறோம். அனுமதிக்க வேண்டு மென பொதுமக்கள் கோரி க்கை விடுத்தனர்.

    ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதையடுத்து மாற்று வழியில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.

    இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் அவரது தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

    அதன் பிறகு சத்தியமங்கலம் தாசில்தார் சக்தி கணேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலையை மட்டும் எடுத்து சென்று ஆற்றில் கரைக்க அனுமதி அளிக்க ப்பட்டது.

    பொதுமக்கள் ஊர்வலமாக தாரை தப்பட்டை முழுங்க செல்ல க்கூடாது என அறிவுறுத்த ப்பட்டது. இதனால் போரா ட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறுமியுடன் இருந்த தாயார் தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறினார்.
    • அதிகாரிகளுக்கும் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பூதப்பாண்டி அருகே தெள்ளந்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதுபற்றி சமூக துறைக்கு புகார்கள் வந்தது. சமூகநல அதிகாரிகள் தூத்துக்குடிக்கு சென்று அந்த சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். சம்பந்தப்பட்ட வாலிபரையும் விசாரணைக்கு அழைத்தனர்.

    அப்போது வாலிபரிடம் விசாரணை நடத்திவிட்டு அவரை அனுப்பி விட்டதாக தெரிகிறது. சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இரவு வரை அலுவலகத்திலேயே வைத்திருந்தனர்.

    அப்போது சிறுமியுடன் இருந்த தாயார் தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறினார். அப்போது அதிகாரிகளுக்கும் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் சிறுமியின் தாயார் அலுவலக வாசலில் அழுது புரண்டார். இதையடுத்து நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை இன்று விசாரணைக்கு அழைத்து வர வேண்டும். வயது சான்றிதழை கொண்டு வர வேண்டும்.

    திருமணத்தை நடத்தக்கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

    • பொங்கல் விழாவையொட்டி எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • விழாக்குழுவினர், கிராம மக்கள், வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.

    இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இதனிடையே சூளகிரி அருகே பேடப்பள்ளி கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி அந்த பகுதியில் உள்ள மைதானத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை அமைக்கும் பணியில் விழாக்குழுவினர் ஈடுபட்டனர். ஆனால் பேடப்பள்ளியில் எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று முன்தினம் எருது விடும் விழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு சென்று எருது விடும் விழாவை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் விழாக்குழுவினர், கிராம மக்கள், வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு ஒன்றுதிரண்டு வந்தனர்.
    • எந்தவித அனுமதியும் இன்றி கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக போலீசார் தெரிவித்தனர்

    கடலூர்:

    கடலூர் அருகே செல்லங்குப்பம் பகுதியில் நேற்று நள்ளிரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு பணிகள் மேற்கொண்டு வந்தனர். தகவல் அறிந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிகால் பாரி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்‌. பின்னர் புதிதாக கொடிக்கம்பம் அமைப்பதற்கு சிமெண்ட் கட்டை மற்றும் இரும்பு பைப் அமைக்கும் பணி நடைபெற்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் புதிதாக கொடிக்கம்பம் அமைக்க வேண்டுமானால் வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் உரிய முறையில் அனுமதி பெற்றிருக்க வேண்டும்‌. மேலும் அனுமதி இல்லாமல் கொடிக்கம்பம் அமைத்தால் அதனை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‌. இது மட்டுமின்றி ஏற்கனவே இந்த பகுதியில் கொடிக்கம்பம் உள்ள நிலையில் எந்தவித அனுமதியும் இன்றி கொடிக்கம்பம் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக போலீசார் தெரிவித்தனர்.

    அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொடிக்கம்பம் உடனடியாக அங்கிருந்து அகற்றி அவர்கள் கொண்டு சென்றனர் . இனி வருங்காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×