search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க"

    • சேலம் பொன்னம்மாப்பேட்டை அண்ணா நகர் 4-வது கிராஸ் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பொன்னுத்தாயை தாக்கி அவரது மூக்கில் இருந்த தங்க மூக்குத்தியை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.
    • போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாப்பேட்டை அண்ணா நகர் 4-வது கிராஸ் பகுதி சேர்ந்த வர் பெருமாள். மனைவி பொன்னுத்தாயி (வயது 95). இவருக்கு 7 மகன்கள் உள்ளனர்.

    அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரு கின்றனர். இந்த நிலையில் பொன்னுத்தாயி தனது 6-வது மகன் ஆனந்தனுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்தன் மற்றும் அவரது மனைவி பரிமளா ஆகியோர் வெளியே சென்று இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 47) என்பவர் வீட்டில் தனியாக இருந்த பொன்னுத்தாயை தாக்கி அவரது மூக்கில் இருந்த தங்க மூக்குத்தியை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.

    அப்போது பொண்ணு தாயின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை விரட்டிச் சென்று பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொள்யைர்களின் கண்ணில் படாததால் 21¼ பவுன் நகைகள் தப்பியது.
    • கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள வழியம்பாளையம் பிரிவு ஜே.எஸ். நகரை சேர்ந்தவர் நித்யானந்தம் (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 4 மாதங்களாக தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொட்டிப்பாளையத்தில் உள்ள ேதாட்டத்தில் வசித்து வருகிறார். அவ்வபோது தனது வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு சென்றார்.

    கடந்த 10-ந் தேதி இரவு இவரது வீட்டில் முன் பக்க கதவு அருகே உள்ள கண்ணாடி ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த காசு மாலை, செயின், நெக்லஸ் உள்பட 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.55 ஆயிரம் ெராக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்த நித்யானந்தம் கண்ணாடி ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் உடனடியாக கோவில் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது நித்யானந்தம் போலீசாரிடம் வீட்டில் இருந்த 37¾ பவுன் தங்க வைர நகைகள் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்தார்.

    உடனடியாக சம்பவஇடத்துக்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் கண்ணில் படாமல் துணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 21¼ பவுன் நகைகளை கைரேகை நிபுணர்கள் எடுத்தனர். பின்னர் அதனை நித்யானந்தத்திடம் ஒப்படைத்தனர். கொள்யைர்களின் கண்ணில் படாததால் 21¼ பவுன் நகைகள் தப்பியது.

    மொத்தம் 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.55 ஆயிரம் ெராக்க பணம் மட்டுமே கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து கோவில் பாளையம் போலீசார் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.  

    • பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
    • துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாமா(வயது 50). இவர் நேற்று அழகாபுரி கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து அழகாபுரி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த மர்ம நபர், பாமாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக பாமா வி.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

    ×