search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெய்லர் கொலை"

    • கறிக்கடையில் வேலை பார்த்து வந்த முகமது ரசூலுக்கும், பாபுவிற்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
    • கொலை வழக்கு தொடர்பாக முகமது ரசூல் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார்.

    சென்னை முகப்பேர் மேற்கு 3-வது பிளாக் பஞ்சமுக சிவன் கோவில் தெருவில் டெய்லர் கடையில் வேலை செய்த பாபு என்பவர் 2017-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கை, கால்கள் என பல துண்டுகளாக வெட்டப்பட்டு வீசப்பட்டன.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பாபுவின் கடைக்கு எதிரே கறிக்கடையில் வேலை பார்த்து வந்த முகமது ரசூலுக்கும் (28) பாபுவிற்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து முகமது ரசூலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் முகமது ரசூல் ஜாமினில் வெளியே வந்தார். கொலை வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். 2019-ம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    இதையடுத்து நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீசார் முகமது ரசூலை 4 ஆண்டுக்கு பிறகு கூடுவாஞ்சேரி அருகே கைது செய்தனர்.

    • கூலிப்படையை சேர்ந்த மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நல்லவன்பாளையம் அடுத்த சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54). இவர் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரபாவதி, அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் தையல் தொழில் மட்டுமின்றி பைனான்ஸ் மற்றும் ரியஸ் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.

    கடந்த 7-ந் தேதி இரவு சுமார் 10 மணியளவில் ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் இருந்து நல்லவ ன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தாமரை நகரில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள் ஆறுமுகத்தை வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்து திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-

    வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் (40) என்பவருக்கு ஆறுமுகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.

    கடன் வாங்கிய பரந்தாமன் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆறுமுகத்திற்கும், பரந்தாமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விரோதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த பரந்தாமன், ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து அவருக்கு தெரிந்த கலசப்பாக்கம் தாலுகா சாலையனூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் பாரதி (22), திருவண்ணாமலை கரையான் செட்டி தெரு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தமிழரசன் (20), திருவண்ணாமலை குளத்து மேட்டு தெரு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (20) ஆகியோருக்கு பணம் கொடுத்து தையல் டெய்லர் ஆறுமுகத்தை கொலை செய்ய சதித்திட்டம் திட்டினார்.

    அதனைத் தொடர்ந்து பாரதி, தமிழரசன், ஸ்ரீகாந்த் ஆகியோர் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 7-ந் தேதி இரவு ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்தனர்.

    அதைத் தொடர்ந்து பரந்தாமன், பாரதி, தமிழரசன், ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரையும் திருவண்ணா மலை டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 3 பேரின் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • தனிப்படை தீவிரம்
    • கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு துப்பு துலக்கினர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52), திருவண்ணாமலை திருவூடல் தெருவில் தையல் கடை நடத்தி வந்தார்.

    தாமரை நகரில் ேநற்று முன்தினம் இரவு சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆறுமுகத்தை வெட்டி கொைல செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்த போது, கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டராம்பட்டு சாலை வழியாக சென்றது தெரியவந்தது.

    கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகினறனர்.

    • பழனி அடிவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.
    • சிலர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது, தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு சொந்த மாநிலங்களுக்கு தப்பி செல்கின்றனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருகே காந்திநகர் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஜெயந்த் சம்மந்தா (வயது34) என்பவர் தனியாக வீடு எடுத்து தறி மற்றும் டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவருடன் மேலும் 4 வடமாநில தொழிலாளர்கள் அந்த வீட்டில் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மற்றவர்கள் ஜெயந்த் சம்மந்தா மீது கோபத்தில் இருந்தனர்.

    நேற்று இரவும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கத்தியால் ஜெயந்த் சம்மந்தாவை சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனைத் தொடர்ந்து 4 வடமாநில தொழிலாளர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவம் குறித்து அறிந்ததும் பழனி டி.எஸ்.பி. சிவசக்தி தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஜெயந்த் சம்மந்தாவின் உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

    பழனி அடிவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது, தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு சொந்த மாநிலங்களுக்கு தப்பி செல்கின்றனர்.

    தற்போது கொலை செய்து விட்டு வடமாநில தொழிலாளர்கள் 4 பேரும் அவர்கள் சொந்த மாநிலத்துக்கு தப்பி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×