search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு தடுப்பு"

    • தேவகோட்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    • ஆலோசனை கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் வலியுறுத்தினார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் டெங்கு தடுப்பு குறித்து அதிகாரிகளுடனுனான ஆலோசனை கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் ஆணையாளர் பார்கவி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் பேசியதா வது:-

    பஸ் நிலையம், அம்மா உணவகம், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காலை மாலை வேளைகளில் நிலவேம்பு கசாயம் வழங் கப்பட வேண்டும். டெங்கு அறிகுறி உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காலியிடங்களில் குப்பைகள், சீமை கருவேல மரங்களை அகற்ற இடத்தின் உரிமையாள ருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் சீமை கருவேல மரங்கள் இருந்தால் உடனே அகற்றப்பட வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியின் மூலம் தெரியப்படுத்த வேண் டும். அந்தந்த வார்டுகளில் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளும்போது வார்டு கவுன்சிலர்களிடம் பணியா ளர்கள் கையொப் பம் பெற்று வர வேண்டும். நகரில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ள போதிலும் மேலும் பரவாமல் தடுக்க மருத்துவர்கள் அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தி டெங்கு தடுப்பு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    மேலும் தடுப்பு நடவ டிக்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட தொற்று நோய் தடுப்பு வல்லுனர் டாக்டர் கிருஷ்ண வேணி, வட்டார மருத்துவர் தினேஷ், நகர சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார சுகாதார மேற் பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் பாண்டி ஆதிநாராயணன் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • தாளநத்தம் கிராமத்தில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அந்த கிராமத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் வட்டாரப் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக கொசு தொல்லை அதிகரித்து காணப்பட்டது.

    இதை அடுத்து கிராமப் பகுதிகளில் டெங்கு பரவும் சூழ்நிலை உருவாகி வருகிறது. கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் கிராமத்தில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அந்த கிராமத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு கிராமங்களிலும் டெங்கு பரவாமல் தடுக்க அந்தந்த ஊராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 மண்டலத்திலும் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    இதையடுத்து டெங்கு காய்ச்சல் பரவி விடாமல் இருக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 மண்டலத்திலும் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு மண்டலங் களிலும் வார்டு வாரியாக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாக கடந்த சில நாட்களாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    குறிப்பாக வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியின் பின் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று பார்க்கின்றனர். அவ்வாறு தண்ணீர் தேங்கி இருந்தால் அந்த தண்ணீரை அகற்ற வலியுறுத்திகின்றனர். மேலும் அந்த இடத்தில் மஞ்சள், உப்பு போட்ட சொல்லி வருகின்றனர்.

    இதுபோல் வீட்டு அருகே தண்ணீர் தேங்காத வண்ணம் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் செப்டிக் டேங்க், குடிநீர் தொட்டி பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    சிரட்டை, பழைய டயர் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி கொள்ளாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து கொசு உற்பத்தியாகும் சூழ்நிலையை ஏற்படுத்து பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 4 மண்டலத்திலும் வார்டு வாரியாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். பெரிய வாகனங்களில் ராட்ச எந்திரங்கள் மூலம் தெளித்து வருகின்றனர்.

    மிகக்குறுகிய சந்துகள், வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    ×