search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
    X

    தாளநத்தத்தில் டெங்கு தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

    டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

    • தாளநத்தம் கிராமத்தில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அந்த கிராமத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் வட்டாரப் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக கொசு தொல்லை அதிகரித்து காணப்பட்டது.

    இதை அடுத்து கிராமப் பகுதிகளில் டெங்கு பரவும் சூழ்நிலை உருவாகி வருகிறது. கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் கிராமத்தில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அந்த கிராமத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு கிராமங்களிலும் டெங்கு பரவாமல் தடுக்க அந்தந்த ஊராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×