search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரென்ட் பிரிட்ஜ்"

    டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகள வரலாற்றில் முதன்முறையாக இரண்டு அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் டபுள் டிஜிட் ரன்னை கடந்துள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற நிலையில் 3-வது டெஸ்ட் கடந்த 18-ந்தேதி முதல் இன்று வரை டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பொதுவாக டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங் பந்திற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி கண்ணை மூடிக்கொண்டு பீல்டிங் தேர்வு செய்யும். முதல் நாள் முதல் செசனில் பேட்டிங் செய்வது மிகமிக கடினம்.



    ஆனால் இந்த டெஸ்டில் நடந்தது எல்லாம் தலைகீழ் இந்திய தொடக்க ஜோடி முதல் இன்னி்ங்சில் 60 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த புஜாரா இரட்டை இழக்கில் ஆட்டமிழந்தார். ரகானே, விராட் கோலி சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் இங்கிலாந்து வீரர்கள் முதல் இன்னிங்சில் இரட்டை இழக்க ரன்னைத் தொட்டனர்.

    இரண்டு இன்னிங்சிலும் இரு அணிகளிலும் முதல் ஐந்து வீரர்கள் இரட்டை இழக்க ரன்னை தாண்டினார்கள். டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக தற்போதுதான் இரண்டு அணிகளின் முதல் ஐந்து வீரர்களும் இரட்டை இலக்க ரன்களை தாண்டியுள்ளனர்.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இங்கிலாந்தை 203 ரன்னில் வீழ்த்தி பெற்ற வெற்றியை இந்திய அணி கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்ப்பணித்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிர்ட்ஜியில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தயா 1-2 என தொடரில் பின்தங்கியுள்ளது.



    டிரென்ட் பிரிட்ஜியில் பெற்ற வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் கூறியுள்ளார்.



    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இந்திய கிரிக்கெட் அணியாக நாங்கள், இந்த வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம். இந்திய அணியாக எங்களால் செய்ய முடிந்த சிறிய விஷயம். கேரளாவில் தற்போது கடினமான நேரம்’’ என்றார்.
    இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமாகியுள்ள ரிஷப் பந்த் சிக்சருடன் டெஸ்ட் ஸ்கோரை தொடங்கி சாதனைப் படைத்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 20 வயதே ஆன விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அறிமுகமானார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 97 ரன்னில் ஆட்டமிழந்ததும், ரிஷப் பந்த் களம் இறங்கினார்.

    அப்போது அடில் ரஷித் பந்து வீசினார். முதல் பந்தை தடுத்தாடிய ரிஷப் பந்த், அடுத்த பந்தில் இமாலய சிக்ஸ் ஒன்றை விளாசினார். இதன்மூலம் அறிமுக போட்டியில் சிக்ஸ் மூலம் ரன் கணக்கை தொடங்கிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளனர். இதற்கு முன் 11 பேர் இந்த சாதனையைப் பெற்றுள்ளனர்.



    நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 32 பந்தில் 22 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
    டிரென்ட் பிரிட்ஜ்-யில் நாளை நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நாளை தொடங்குகிறது. இதில் ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரில் இருவருக்குதான் இடம் என்பதால் யார் யார் ஆடம் லெவன் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

    பெரும்பாலான முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேருடன் களம் இறங்க வேண்டும் என்ற வலியுறுத்தினார்கள். இந்நிலையில் நாளைய டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறும் 11 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



    இதில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அறிமுகமாகி ஆட்ட நாயகன் விருது பெற்ற சாம் குர்ரான் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாளை இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. ஜோஸ் பட்லர், 6. பேர் ஸ்டோவ், 7. பென் ஸ்டோக்ஸ், 8. கிறிஸ் வோக்ஸ், 9 அடில் ரஷித், 10. ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. ஸ்டூவர்ட் பிராட்.
    நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ்-யில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 9 போட்டிகளில் 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களும் வீழ்த்தி இந்தியாவை படுதோல்வியடையச் செய்தார்.

    அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 553 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இன்னும் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். மெக்ராத் 563 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    3-வது டெஸ்ட் நாளை மறுநாள் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ்-யில் நடக்கிறது. டிரென்ட் பிரிட்ஜ் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு இதுவரை ஆண்டர்சன் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும். அப்படி என்றால்தான் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால், ஆண்டர்சன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ஆண்டர்சன் 2003-ல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5 விக்கெட்டும், 2008-ல் நியூசிலாந்திற்கு எதிராக 7 விக்கெட்டும், 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 11 விக்கெட்டுக்களும், 2013-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 10 விக்கெட்டும், 2017-ல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5 வி்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
    இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸில் நடைபெற்ற முதல் இரண்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    முதல் டெஸ்டில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம் பிடித்திருந்தார். பிரிஸ்டோலில் நடைபெற்ற தகராறு காரணமாக கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்ததால் லார்ட்ஸ் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்திருந்தார்.



    லார்ட்ஸ் டெஸ்டில் கிறிஸ் வோக்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். இதனால் 3-வது டெஸ்டில் இருவரில் யார் இடம்பெறுவார்கள்? என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெறும் 3-வது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதுமில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    ×