search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்கள் வேலை நிறுத்தம்"

    அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். #DoctorsStrike
    மதுரை:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக சம்பளம் வழங்ககோரி தமிழகம் முழுவதும் இன்று டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 35-க்கும் மேற்பட்ட துறைகளில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் இன்று காலை பணிக்கு வரவில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    வெளி நோயாளிகள் பிரிவை பொருத்தவரை மிக குறைந்த டாக்டர்களே பணியில் இருந்ததால், நோயாளிகள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்க நேரிட்டது.

    இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) சண்முக சுந்தரத்திடம் கேட்டபோது, அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் காரணமாக ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

    இதையடுத்து அரசு டாக்டர்கள் அல்லாத பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களை பணியில் அமர்த்தி நிலைமையை சமாளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

    ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் சிகிச்சைக்கு வந்த வெளி நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் உள்ள 42 டாக்டர்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 10 மருத்துவமனைகள், 48 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று காலை 8 மணி முதல் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை.

    மற்றபடி அவசர சிகிச்சைகள், வார்டில் தங்கி உள்ள உள் நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் வெளிநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று 1540 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில பொருளாளர் டாக்டர் ராமு தெரிவித்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் 13 அரசு ஆஸ்பத்திரிகளும், 56 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள 156 டாக்டர்களில் 77 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் வெளிநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  #DoctorsStrike
    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். #DoctorsStrike
    ராமநாதபுரம்:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாக்டர்கள் அறிவித்தனர்.

    அதன்படி ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் சிகிச்சைக்கு வந்த வெளி நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    போராட்டம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் மலையரசு கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கிட கோரி இன்று ஒரு நாள் வெளிநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். மாநில கூட்டமைப்பின் அறிவுரைப்படி ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் உள்ள 42 டாக்டர்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 10 மருத்துவமனைகள், 48 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது.

    மற்றபடி அவசர சிகிச்சைகள், வார்டில் தங்கி உள்ள உள் நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும். இந்த போராட்டம் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடைபெறும். பொதுமக்கள் எங்கள் நியாயமான கோரிக்கையை உணர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும், என்றனர்.

    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் வெளிநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று 1540 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில பொருளாளர் டாக்டர் ராமு தெரிவித்தார். #DoctorsStrike
    மதுரையில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
    மதுரை:

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ஜனநாயக மரபுக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று (சனிக்கிழமை) தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்கியது. மாலை 6 மணி வரை வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 100 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிளீனிக்குகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணி புரிகின்றனர். அவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

    வேலை நிறுத்தம் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற அதிகளவில் வந்திருந்ததை காண முடிந்தது. #tamilnews
    நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #IndianMedicalAssociation #Doctorsstrike

    நெல்லை:

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா முழுவதும் இன்று தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ‘ஸ்டிரைக்’ செய்தனர். தமிழகத்திலும் தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    இதனால் நெல்லை மாவட்டத்தில் புறநகரில் உள்ள 400 ஆஸ்பத்திரிகளிலும், மாநகரில் உள்ள 100 ஆஸ்பத்திரிகளிலும் இன்று டாக்டர்கள் சாதாரண சிகிச்சைகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

    இதனால் அனைத்து தனியார் ஆஸ்பத்திரியிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் பல கிளினிக்குகள் இன்று பகல் மூடப்பட்டு இருந்தது. பிரபல கண் ஆஸ்பத்திரிகளும் இன்று மூடப்பட்டது.

    ஆனால் பெரிய ஆஸ்பத்திரியில் தங்கி உள்ள நோயாளிகளுக்கும், மகப்பேறு சிகிச்சையும், அவசர சிகிச்சையும் பாதிப்பு இல்லாமல் தொடர்ந்து நடந்தது. இன்று இரவு 6 மணிக்கு மேல் சாதாரண சிகிச்சைகள் நடத்தப்படும் என்றும் தனியார் டாக்டர்கள் சங்க நிர்வாகிகளான டாக்டர்கள் ஆதம்அலி, அன்பு ராஜன், பிரேம சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். #IndianMedicalAssociation  #Doctorsstrike

    ராமநாதபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #IndianMedicalAssociation #Doctorsstrike

    ராமநாதபுரம்:

    தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்வது, ஜனநாயக மரபுக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்து வருகிறது.

    மேலும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து இன்று (சனிக்கிழமை) தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவித்தது.

    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 70 தனியார் மருத்தவமனைகளிலும் 220 மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து மாவட்ட மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் கலீல் ரகுமான் கூறுகையில், உள்நோயாளிகள் மற்றும் பிரசவம் போன்ற அவசர சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன.

    வெளி நோயாளிகளுக்கு மட்டும் மாலை 6 மணி வரை சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என்றார்.

    தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, வெளியூர் மற்றும் கிராமப்பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இன்று அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

    ×