search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெலென்ஸ்கி"

    • 11 நாடுகளின் கூட்டணியின் பயிற்சி இந்த மாதம் தொடங்க உள்ளது.
    • 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் விமானிகள் தயாராகிவிடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உக்ரைன், ரஷியா போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷிய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களையே உக்ரைன் நம்பி உள்ளது.

    உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    தனது போர்த்திறனை அதிகரிப்பதற்காக எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்களை வாங்க உக்ரைன் முடிவு செய்தது.

    இதனால் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளிடம் உக்ரைன் அதிகாரிகள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த எப்-16 போர் விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை அதன் அனுமதி அவசியம் ஆகும்.

    இதற்கிடையே, எப்-16 விமானங்களை மற்ற நாடுகளுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு இந்த விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    இந்நிலையில், உக்ரைன் விமானிகளுக்கு எஃப்-16 போர் விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிக்க கிரீஸ் நாடு முன்வந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    "நாங்கள் விமானக் கூட்டணிக்கு ஒரு முக்கியமான முடிவைப் பெற்றுள்ளோம். கிரீஸ் எப்-16 போர் விமானங்களில் எங்கள் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கும். இந்தச் சலுகைக்கு நன்றி," என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

    மேலும், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து எப்-16 போர் விமானங்களை அதன் விமானிகள் பயன்படுத்த பயிற்சி பெற்றவுடன் உக்ரைனிடம் ஒப்படைக்கும் அமெரிக்க முடிவை உக்ரைன் வரவேற்றது.

    11 நாடுகளின் கூட்டணியின் பயிற்சி இந்த மாதம் தொடங்க உள்ளது. மேலும் 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் விமானிகள் தயாராகிவிடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அமைதி பேச்சுவார்த்தையே தொடர வேண்டியது அவசியம்.
    • போர் நீடிப்பது அணுமின் நிலையங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

    உக்ரைன், ரஷியா இடையேயான போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று தொலைபேசி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    உக்ரைனில் நிலவி வரும் தற்போதைய சூழல் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். பிரச்சினைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்றும், தூதரக ரீதியான அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் அப்போது கூறினார்.

    போர் நீடிப்பது அணுமின் நிலையங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், பேரழிவை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.  ஐ.நா சாசனம், சர்வதேச சட்டம், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டியதன் முக்கியத்துவதும் குறித்து பிரதமர் எடுத்தரைத்தார்.

    உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண உதவுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக மோடி அப்போது கூறியதாகவும் பிரதமர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×