search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து வழக்கு"

    • ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் அ.ம.பரமசிவம்.
    • கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பரமசிவம் மரணம் அடைந்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் அ.ம.பரமசிவம்.

    இவரும், இவரது மனைவி நல்லம்மாளும் வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.38 லட்சத்துக்கு சொத்துச் சேர்த்ததாக 1997-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, பரமசிவத்துக்கு 2 ஆண்டு, அவரது மனைவி நல்லம்மாளுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2000-ம் ஆண்டு பரமசிவம் நல்லம்மாள் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு சுமார் 23 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பரமசிவம் மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தார். மேலும் இவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக 417 சதவீதம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த ஓராண்டு சிறை தண்டனையை நல்லம்மாள் அனுபவிக்க வேண்டும்.

    இதற்கு முன்பு அவர் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால் அந்த காலத்தை தண்டனையில் இருந்து கழிக்க வேண்டும். மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி கூறியுள்ளார்.

    • வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் விசாரணை.
    • சொத்து வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை.

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த 2006ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் வந்தது.

    அப்போது, இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி வசந்த லீலா உத்தரவிட்டுள்ளார்.

    • அண்ணன் என்ற முறையில் நான்தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு ஆவேன்.
    • ஜெ.தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் ஆஜரானார்.

    சென்னை :

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பு பிறப்பித்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 83 வயது முதியவர் என்.ஜி.வாசுதேவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கு 50 சதவீதம் பங்கு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் தந்தை ஆர்.ஜெயராமுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ஜெ.ஜெயம்மாவுக்கு நான் ஒரே மகன். 2-வது மனைவி வேதவல்லி என்ற வேதம்மாவுக்கு, ஜெயக்குமார், ஜெயலலிதா என்று இருவர் பிறந்தனர்.

    இந்த வகையில் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் என்னுடைய சகோதர, சகோதரி ஆவர். 1950-ம் ஆண்டில், என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூரு கோட்டில் என் அம்மா தொடர்ந்த வழக்கில், வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது.

    ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு ஜெயக்குமார் இறந்து விட்டதால், அண்ணன் என்ற முறையில் நான்தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு ஆவேன்.

    எனவே, ஜெயலலிதாவின் மொத்த சொத்துகளில் 50 சதவீத பங்கை எனக்கு தர தீபா, தீபக் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு, ஐகோர்ட்டு மாற்றியது. இந்த வழக்கு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதை விசாரணைக்கு ஏற்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு மாஸ்டர் கோர்ட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது.

    ஆனால், இருவரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு மாஸ்டர் கோர்ட்டு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெ.தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் ஆஜரானார். ஆனால், எதிர்மனுதாரர்கள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வாசுதேவன் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாக மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    ×