search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்மரம் கடத்தல்"

    • செம்மரங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர்.
    • தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வண்டக்கல் வளவு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் டிஐஜி செந்தில் குமார் உத்தரவின்படி, அதிரடிப்படை டிஎஸ்பி செஞ்சுராஜூ தலைமையில் அன்னமையா மாவட்டம் ராஜாம்பேட்டை மண்டலம் எஸ்ஆர் பாலம் ரோல்லமடுகு பகுதியில் சோதனை நடத்தினர்.

    சாலமக்குள பகுதியில் சிலர் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர்.அதிரடிப்படை போலீசாரை பார்த்ததும் செம்மரங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் அங்கிருந்த 10 செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல், கோடூர் துணைக் கட்டுப்பாட்டு நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கிருபானந்தாவைச் சேர்ந்த அல்லிபாஷா குழுவினர் ராஜாம்பேட்டை எல்லைக்குட்பட்ட தும்மலபைலு பகுதியில் சோதனை நடத்தினர்.

    அவர்கள் கலிகிரி கோனை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சிலர் செம்மரங்களை வெட்டி தூக்கி சென்றதை கண்டனர்.

    அவர்களை சுற்றி வளைக்க முயன்றபோது, செம்மரங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர்.

    விசாரணை நடத்தியதில், அவர் தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வண்டக்கல் வளவு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 47) என தெரியவந்தது.

    அங்கு கிடந்த 10 செம்மரங்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    • ரூ.40 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன
    • தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செம்மரக்கட்டைகள கடத்தியது தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்துவதாக சித்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது.

    சித்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையின்போது 2 கார்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தப்பட்ட 8 செம்மர கட்டைகள் மற்றும் கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் சித்தூர்- கடப்பா நெடுஞ்சாலையில் நடந்த வாகன சோதனையின்போது, 2 கார்களில் இருந்த 4 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. செம்மரக் கட்டைகள் கடத்தி வந்ததாக, வேலூர் மாவ்டடத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செம்மரக்கட்டைகள கடத்தியது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.

    ×