search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை"

    • திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • விபத்துக்குள்ளான லாரியை போலீசாரும், பொதுமக்களும் அப்புறப்படுத்தினர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் தமிழக-கேரளா எல்லை பகுதியான கோட்டைவாசல் பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் தமிழகத்திற்கும், கேரளா விற்கும் சென்று வருகின்றன.

    இந்த பகுதியில் அமைந்துள்ள புளியரை எஸ் வளைவில் நீளமான தொட்டிகள் கொண்ட கனரக லாரிகள் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் சற்று தொலை விலேயே நிறுத்தப்படும். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    அணிவகுத்த வாகனங்கள்

    இந்நிலையில் நேற்று மதியம் கேரளாவில் இருந்து தென்காசி நோக்கி வந்த கனரக லாரி ஒன்று எஸ் வளைவு பகுதியில் எதிர்பா ராதவிதமாக பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாக னங்கள் நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டன.

    இதன் காரணமாக திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி செல்லும் வாகனங்க ளும், கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்க ளும் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியா மல் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.

    போக்குவரத்து நெருக்கடி

    இந்நிலையில் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான லாரியை கிரேன் உதவியுடன் போலீசாரும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சேர்ந்து அப்புறப்படுத்தினர். கடும் நெருக்கடிக்கு இடை யில் துரிதமாக செயல்பட்டு லாரியை அப்புறப்படுத்திய பின்னர் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சா லையில் போக்குவரத்து சீரானது. ஏற்கனவே செங்கோட்டை முத்துச்சாமி பூங்கா மற்றும் வனத்துறை சோதனை சாவடி பகுதி களில் பாலப்பணிகள் நடை பெற்று வருகிறது.

    இதன் காரணமாகவும் அந்த சாலையில் கடுமை யான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அங்கு மாலை நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருப்பதால், கூடுதலாக போலீசார் நிறுத் தப்பட்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

    எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    • காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கும் விதமாக தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட 10 வகையான தூய்மை பணிகள் நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கும் விதமாக தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியா் சுடர்மணி வரவேற்று பேசினார்.

    அதனைதொடா்ந்து வளாகத் தூய்மை, கட்டிடங்கள் பராமரித்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட 10 வகையான தூய்மை பணிகள் நடந்தது. மேலும் மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக உடல் தூய்மை, வீடு, கழிவறை, பூங்கா, சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் தூய்மையைப் பேணிக் காப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொருளியல் முதுகலை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

    • பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • திருச்செந்தூருக்கு வைகாசி விசாக நாளில் ஒரு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    வீ.கே.புதூர்:

    இந்த ஆண்டு வைகாசி விசாக திருநாள் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

    இந்த நாளில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பால் குடம் எடுத்தும், பாதயாத்திரையாக சென்று வழிபடுவார்கள்.

    இந்த நாட்களில் பக்தர்களின் வசதிக்காக மதுரையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதேபோல் செங்கோட்டையில் இருந்தும் திருச்செந்தூருக்கு வைகாசி விசாக நாளில் ஒரு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் 8.40 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. அதன்பின்னர் பகல் முழுவதும் இந்த ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகிறது.

    எனவே இந்த ரெயிலை காலை 9. 15 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூருக்கு 10.35 மணிக்கு சென்றடையும் வகையிலும், மாலை 4.15 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு, நெல்லைக்கு மாலை 5.50 மணிக்கு சென்றடையும் வகையில் இயக்க வேண்டும் என பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த சிறப்பு ரெயிலால் செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த முருக பக்தர்கள் பயன் அடைவார்கள்.

    ×