search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கப்பள்ளி"

    • தேசிய நெடுஞ்சாலையில் கோபி-தாராபுரம் சாலையும் சந்திக்கும் இடத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
    • நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் வந்து செல்லும் மையமாகவும் உள்ளது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் செங்கப்பள்ளி பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் கோபி-தாராபுரம் சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் மையப் பகுதியாகவும், கோவை- ஈரோடு- சேலம், கோபி-ஊத்துக்குளி-திருப்பூர், வழித்தடத்தில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்து பயணிகள் ஏறி இறங்கி செல்லும் மையமாக செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் உள்ளது. வாரச்சந்தைக்கு வந்து செல்லும் மக்களுக்கும், நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் வந்து செல்லும் மையமாகவும் உள்ளது. மணிக்கணக்கில் பயணம் செய்து செங்கப்பள்ளி வரும் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், இயற்கை உபாதைகளை கழிக்க ஒரு பொது கழிப்பிடம் இல்லை. ஆகவே செங்கப்பள்ளி பேருந்து நிறுத்த பகுதியில் ஒரு பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் என செங்கப்பள்ளி ஊராட்சிக்கும், அரசுக்கும் பொதுமக்களும், பேருந்து பயணிகளும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

    இதையடுத்து செங்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு திட்ட பணியில் நிதி ஒதுக்கீடு பெற்று பொதுக் கழிப்பிடம் கட்ட 28.11.22 அன்று ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் அஸ்திவாரப் பணிகளை துவக்கி உள்ளனர்.

    அஸ்திவாரப் பணிகளை துவக்கி செய்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் அந்த பணியை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், திட்ட பணியை சீர்குலைக்கும் நோக்கில் எந்திரங்களை வைத்து தோண்டப்பட்ட அஸ்திவாரங்களை அராஜகமான முறையில் மூடி அரசு திட்டப்பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இதனால் பொதுக்கழிப்பிட பணி தற்போது நின்று போய் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயன்படும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தால் நல்ல நோக்கத்தோடு செய்யப்பட்ட பணியை சிலர் சுயநல நோக்கோடு தடுத்துள்ள செயல் பொதுநலன் விரும்பும் யாவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. செங்கப்பள்ளிக்கு வரும் மக்கள் இயற்கை உபாதையை கழிக்க அன்றாடம் படும் சிரமத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆகவே மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், ஏற்கனவே பொதுமக்கள் வைத்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் செங்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தால் பொது நலன் கருதி தொடங்கப்பட்ட பொது கழிப்பிட பணியை திட்டமிட்ட அடிப்படையில் செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகிலேயே விரைவில் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயநல நோக்கோடு பொதுக் கழிப்பிட திட்டப் பணியை தடுக்கின்ற எந்த ஒரு நபர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • கோவிலில் பூஜைகள் முடிவடைந்து இரவு 9 மணி அளவில் கோவில் பூட்டப்பட்டது.
    • கோவிலின் பூட்டை மா்ம நபா்கள் அதிகாலை 2 மணி அளவில் உடைக்க முயன்றுள்ளனா்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியை அடுத்த செங்கப்பள்ளியில் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலில் பூஜைகள் முடிவடைந்து இரவு 9 மணி அளவில் கோவில் பூட்டப்பட்டது. இதனிடையே கோவிலின் பூட்டை மா்ம நபா்கள் அதிகாலை 2 மணி அளவில் உடைக்க முயன்றுள்ளனா். அப்போது கதவில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அடித்ததால் கொள்ளை முயற்சியைக் கைவிட்ட மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • செரங்காடு,ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
    • கருணைப்பாளையம் பிரிவு, செங்கோடாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    செங்கப்பள்ளி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 8 மணிமுதல் பகல் 12 மணி வரை செங்கப்பள்ளி, விருமாண்டாம்பாளையம், காடபாளையம், பள்ளப்பாளையம்,பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூர், வட்டாலப்பதி, செரங்காடு,ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர் அலகுமலை துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) கண்டியன் கோவில் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும். இதனால் கண்டியன்கோவில், பூசாரிப்பாளையம், நவவாய்க்கால்மேடு, முதியாநெரிசல், வேலாங்காட்டுப்பாளையம், கருணைப்பாளையம் பிரிவு, செங்கோடாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை 7-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
    • காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    திருப்பூர்:

    ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 7-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.விஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    ×