search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கப்பள்ளி பஸ் நிலையத்தில் பொது கழிப்பறை அமைக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு
    X

    கோப்புபடம்.

    செங்கப்பள்ளி பஸ் நிலையத்தில் பொது கழிப்பறை அமைக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு

    • தேசிய நெடுஞ்சாலையில் கோபி-தாராபுரம் சாலையும் சந்திக்கும் இடத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
    • நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் வந்து செல்லும் மையமாகவும் உள்ளது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் செங்கப்பள்ளி பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் கோபி-தாராபுரம் சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் மையப் பகுதியாகவும், கோவை- ஈரோடு- சேலம், கோபி-ஊத்துக்குளி-திருப்பூர், வழித்தடத்தில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்து பயணிகள் ஏறி இறங்கி செல்லும் மையமாக செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் உள்ளது. வாரச்சந்தைக்கு வந்து செல்லும் மக்களுக்கும், நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் வந்து செல்லும் மையமாகவும் உள்ளது. மணிக்கணக்கில் பயணம் செய்து செங்கப்பள்ளி வரும் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், இயற்கை உபாதைகளை கழிக்க ஒரு பொது கழிப்பிடம் இல்லை. ஆகவே செங்கப்பள்ளி பேருந்து நிறுத்த பகுதியில் ஒரு பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் என செங்கப்பள்ளி ஊராட்சிக்கும், அரசுக்கும் பொதுமக்களும், பேருந்து பயணிகளும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

    இதையடுத்து செங்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு திட்ட பணியில் நிதி ஒதுக்கீடு பெற்று பொதுக் கழிப்பிடம் கட்ட 28.11.22 அன்று ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் அஸ்திவாரப் பணிகளை துவக்கி உள்ளனர்.

    அஸ்திவாரப் பணிகளை துவக்கி செய்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் அந்த பணியை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், திட்ட பணியை சீர்குலைக்கும் நோக்கில் எந்திரங்களை வைத்து தோண்டப்பட்ட அஸ்திவாரங்களை அராஜகமான முறையில் மூடி அரசு திட்டப்பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இதனால் பொதுக்கழிப்பிட பணி தற்போது நின்று போய் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயன்படும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தால் நல்ல நோக்கத்தோடு செய்யப்பட்ட பணியை சிலர் சுயநல நோக்கோடு தடுத்துள்ள செயல் பொதுநலன் விரும்பும் யாவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. செங்கப்பள்ளிக்கு வரும் மக்கள் இயற்கை உபாதையை கழிக்க அன்றாடம் படும் சிரமத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆகவே மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், ஏற்கனவே பொதுமக்கள் வைத்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் செங்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தால் பொது நலன் கருதி தொடங்கப்பட்ட பொது கழிப்பிட பணியை திட்டமிட்ட அடிப்படையில் செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகிலேயே விரைவில் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயநல நோக்கோடு பொதுக் கழிப்பிட திட்டப் பணியை தடுக்கின்ற எந்த ஒரு நபர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×