search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Current cut"

    • தூத்துக்குடியில் ரம்யமான சூழலுடன் குளிர்ந்த காற்று வீசியது
    • மழை காரணமாக காலை 7 மணி முதல் மின்சாரம் தடை ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இன்று காலை 5 மணிக்கு மேல் மிதமான சாரல் மழை பெய்ய தொடங்கியது,சாலை தெருக்களின் மழை தூறல்கள் வழிந்தோட ரம்யமான சூழலுடன் குளிர்ந்த காற்று வீசியது புதிய பழைய பேருந்து நிலைய பகுதி, தெர்மல் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகள், நெல்லை-திருச்செந்தூர் சாலை பகுதி, மார்க்கெட் சண்முகபுரம், முத்தையாபுரம், மட்டக்கடை உட்பட அனைத்து முக்கிய பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.சண்முகபுரம் சிவந்தா குளம் பகுதியில் மழையின் காரணமாக காலை 7 மணி முதல் மின்சாரம் தடை ஏற்பட்டது.

    • செரங்காடு,ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
    • கருணைப்பாளையம் பிரிவு, செங்கோடாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    செங்கப்பள்ளி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 8 மணிமுதல் பகல் 12 மணி வரை செங்கப்பள்ளி, விருமாண்டாம்பாளையம், காடபாளையம், பள்ளப்பாளையம்,பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூர், வட்டாலப்பதி, செரங்காடு,ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர் அலகுமலை துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) கண்டியன் கோவில் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும். இதனால் கண்டியன்கோவில், பூசாரிப்பாளையம், நவவாய்க்கால்மேடு, முதியாநெரிசல், வேலாங்காட்டுப்பாளையம், கருணைப்பாளையம் பிரிவு, செங்கோடாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை 7-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
    • காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    திருப்பூர்:

    ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 7-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ்., வி.ஜி.புதூா், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.விஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.

    செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.

    ×