search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாடிய கும்பல் கைது"

    • உத்தமபாளையம் போலீசார் கோம்பை-கம்பம் சாலை தாமஸ் காலனி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர்
    • அப்போது பள்ளி விடுதி பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டி ருந்தனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் போலீசார் கோம்பை-கம்பம் சாலை தாமஸ் காலனி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பள்ளி விடுதி பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டி ருந்தனர்.

    அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். உத்தமபாளையத்தை சேர்ந்த முகமது மைதீன் (வயது40), வல்லரசு (23), மணிகண்டன் (21), ஊத்துப்பட்டியை சேர்ந்த மதிவாணன் (28) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சூதாட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதே பகுதியில் சூதாடிய மற்றொரு கும்பலை சேர்ந்த சூர்யா (21), ஈஸ்வரன் (32), கார்த்திக் (30), மாரிமுத்து (34) ஆகியோரையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • சின்னமனூர் போலீசார் மின் மயானம் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • அப்பகுதியில் சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் போலீசார் மின் மயானம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிய மாரி முத்து (வயது56), கணேசன் (60) செ ல்வேந்திரன் (57) ஆகியோரை கைது செய்து பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கோம்பை போலீசார் ரோந்து சென்ற போது தென்னந்தோப்பில் சூதாடிய கணேசன் (47), சிவா (43), ஈஸ்வரன் (48), உதயா (40), அன்பு (44), குபேந்திரன் (50), கருப்பசாமி (48) ஆகியோரை கைது செய்து பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற மற்றும் சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ெநாச்சிஓடைப்பட்டி நாடகமேடை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சுப்பிரமணி, சிவச்சந்திரன், பாலமுருகன், முனியாண்டி, முத்துக்குமரன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டு கட்டுகளை கைப்பற்றினர்.

    இதேபோல நொச்சிஓடைப்பட்டியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த வெள்ளைச்சாமி(75) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 68 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1300-ஐ பறிமுதல் செய்தனர்.

    • தேவதானப்பட்டி போலீசார் வரதராஜ்நகர் சுகர்பேக்டரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கும்பலை கைது செய்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் வரதராஜ்நகர் சுகர்பேக்டரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள காட்டில் ஜெய்கணேஷ், கருத்தகண்ணன், வீரன், ராஜேஸ்கண்ணன், செல்வம், பரமன், நாகராஜ் ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் அவர்களை கைது செய்து ரூ.3070 மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • ஆண்டிபட்டி புத்துக்கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • பணம் வைத்து சூதாடிய கும்பல் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள்தேவி தலைமையிலான போலீசார் புத்துக்கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த நாகராஜன், பால்ராஜ், பிச்சைமணி, ராஜமாணிக்கம், செல்லமணி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த பணம் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே உப்பார்பட்டி பகுதியில் வீரபாண்டி போலீசார் ரோந்து சென்றனர்.
    • சூதாடிய 3 பேரை கைது செய்து சீட்டுக்கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே உப்பார்பட்டி பகுதியில் வீரபாண்டி போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கிருந்த காலி இடத்தில் சூதாடிய கணேசன்(62), அமர்நாத்(35), விமல்குமார், மாரிமுத்து(46) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர். இதேபோல் கண்டமனூர் போலீசார் எம்.சுப்புலாபுரம் பெரியஓடை பகுதியில் ேராந்து சென்றனர்.

    அப்போது அங்கு சூதாடிய சரவணராஜா(41), சுப்பிரமணி(67), மகாராஜன்(46) ஆகிய 3 பேரை கைது செய்து சீட்டுக்கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ×