பணம் வைத்து சூதாடிய கும்பல் கைது

ஆண்டிபட்டி புத்துக்கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பணம் வைத்து சூதாடிய கும்பல் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள்தேவி தலைமையிலான போலீசார் புத்துக்கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த நாகராஜன், பால்ராஜ், பிச்சைமணி, ராஜமாணிக்கம், செல்லமணி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த பணம் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com