

தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் வரதராஜ்நகர் சுகர்பேக்டரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள காட்டில் ஜெய்கணேஷ், கருத்தகண்ணன், வீரன், ராஜேஸ்கண்ணன், செல்வம், பரமன், நாகராஜ் ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை கைது செய்து ரூ.3070 மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.