search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுஷ்மிதா சென்"

    • உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • இதன் கும்பாபிஷேக விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் அயோத்தி சர்ச்சையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.


    சுஷ்மிதா சென் பதிவு

    இந்த விழாவில், பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


    பார்வதி பதிவு

    இந்நிலையில், பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது சமூக வலைதளத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு நடிகை பார்வதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சுஷ்மிதா சென்.
    • இவர் தற்போது நடித்துள்ள தாலி வெப்தொடரின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    1994-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 47 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மாடலான ரோஹ்மான் ஷாவ்லுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.

    ஆனால் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்ததையடுத்து, தான் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனிடையே திரைப்படம் நடிப்பதில் இருந்து சற்று விலகியுள்ள அவர், சில வெப் தொடர்களில் மட்டும் நடித்து வருகிறார்.



    தற்போது சுஷ்மிதா சென் தாலி (Taali) என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் ஸ்ரீகவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டு உள்ளது. இதை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கி உள்ளார். இந்நிலையில் இந்த வெப் தொடரின் டீசரை சுஷ்மிதா சென் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். சுஷ்மிதாவின் குரலில் தொடங்கும் இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சுஷ்மிதா சென்.
    • இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

    நடிகை சுஷ்மிதா சென் தனது சமீபத்திய பதிவில், சில நாட்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என தனது உடல் நலம் குறித்து பகிர்ந்து கொண்டார். நடிகை சுஷ்மிதா சென் தனது தந்தை சுபீர் சென்னுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:- உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் , பலமாகவும் வைத்திருங்கள். அது உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அது உங்களுடன் துணை நிற்கும் இது என் தந்தை சுபிர் சென் சொன்ன புத்திசாலித்தனமான வார்த்தைகள்.

     

    சுஷ்மிதா சென்

    சுஷ்மிதா சென்


    இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஸ்டென்ட் போடப்பட்டது. மிக முக்கியமாக, எனக்கு பலமான இதயம் இருக்கிறது' என்பதை எனது இருதயநோய் நிபுணர் மீண்டும் உறுதிப்படுத்தினார். நிறையபேருக்கு தங்களின் சரியான நேரத்தில் உதவி மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மற்றொரு இடுகையில் அதைச் செய்கிறேன். எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி.


    சுஷ்மிதா சென்

    சுஷ்மிதா சென்

     

    இந்த பதிவு உங்களுக்கு (எனது நலம் விரும்புபவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு) தெரியப்படுத்துவதற்காக மட்டுமே. நல்ல செய்தி என்னவென்றால் எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் மீண்டும் எனது வாழ்க்கைக்கு தயாராக இருக்கிறேன். நான் உங்களை அன்பு செலுத்துகிறேன் நண்பர்களே என கூறியுள்ளார்.

    • நடிகை சுஷ்மிதா சென் ‘தாலி’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
    • இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக 'ரட்சகன்' படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். அர்ஜுன் நடித்த 'முதல்வன்' படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 46 வயதாகும் சுஷ்மிதா சென் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.


    சுஷ்மிதா சென்

    இவர் தற்போது வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி, சுஷ்மிதா சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் கவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் 'தாலி' என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்குகிறார்.


    தாலி போஸ்டர்

    இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுஷ்மிதா சென், "இந்த அழகான நபரை சித்தரித்து அவரது கதையை உலகிற்கு கொண்டு வந்ததை விட வேறு எதுவும் என்னை பெருமையுடனும் நன்றியுடனும் இருக்க செய்யவில்லை. வாழ்வதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமணம் செய்யாமல் இருக்கும் சுஸ்மிதா சென், ரெணி மற்றும் அலிசா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
    • இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    மும்பை:

    லலித் மோடி, சுஷ்மிதாவை திருமணம் செய்துகொண்டாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

    திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் சுஷ்மிதா சென், இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    பிரபல பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென், முன்னாள் ஐபிஏல் தலைவர் லலித் மோடியின் டீவிட்-க்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    1994-ஆம் ஆண்டு நடைபெற்ற 43வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்ற சுஸ்மிதா சென் பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சுஸ்மிதா சென்னுக்கு தற்போது வயது 46. திருமணம் செய்யாமல் இருக்கும் சுஸ்மிதா சென், ரெணி மற்றும் அலிசா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் ஐபிஎல் முன்னாள் தலைவரான லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் 'என் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. சுஷ்மிதாவை காதலிக்கிறேன். காதல் என்பதால் கல்யாணம் ஆனது என்பது அல்ல. ஆனால், ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது நாங்கள் ஒன்றாக டேட்டிங்கில் இருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி, நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் இருந்தனர். லலித் மோடி, சுஷ்மிதாவை திருமணம் செய்துகொண்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது.

    இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், "நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். திருமணம் ஆகவில்லை. மோதிரம் மாற்றிக்கொள்ளவில்லை. எல்லையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன். தேவையான விளக்கத்தை அளித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கை மற்றும் வேலைக்கு செல்லப்போகிறேன். எனது மகிழ்ச்சியை பகிர்ந்தவர்களுக்கு நன்றி. அப்படி செய்யாதவர்களுக்கு இது தேவையில்லாத ஒன்று" என்று கூறியுள்ளார்.

    பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை சுஷ்மிதா சென் ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
    • இவர் தற்போது லலித் மோடியை டேட்டிங் செய்கிறார்.


    நடிகை சுஷ்மிதா சென் 1997-ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

    2000-ஆம் ஆண்டில் ரேனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019-ல் அலிசா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். இவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை மட்டும் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.


    லலித் மோடி - சுஷ்மிதா சென்

    இந்நிலையில், 46 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென், 56 வயதான தொழில் அதிபர் லலித் மோடியுடன் டேட்டிங்கில் இருக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக லலித் மோடி தனது சமூகவலைதளப் பக்கத்தில், மாலத்தீவில் நடிகை சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மாலத்தீவு உள்ளிட்ட உலக சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியுள்ளோம். புதிய வாழ்க்கை, புதிய பயணம்" என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.


    லலித் மோடி - சுஷ்மிதா சென்

    மேலும், அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு பதிவில், இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதுவும் ஒரு நாள் நடக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுஷ்மிதா சென்.
    • இப்படத்தின் பிறகு அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட் சென்றார்.

    நடிகை சுஷ்மிதா சென் 1997-ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

    சுஷ்மிதா சென்

    சுஷ்மிதா சென்

    2000-ஆம் ஆண்டில் ரேனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019-ல் அலிசா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். இவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை மட்டும் தத்தெடுத்து வளர்த்து வந்தார். திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பதற்கு சுஷ்மிதா சென் கூறியதாவது:- "அதிர்ஷ்டவசமாக சில சுவாரசியமான ஆண்களை நான் சந்தித்து உள்ளேன். அதுமட்டுமல்லாமல் அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்து விட்டேன். ஆகையால் தான் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் மூன்று முறை எனக்கு திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. ஆனால் கடவுள் என்னை காப்பாற்றி விட்டார். அதேபோல அந்த கடவுள் தான் இந்த இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார்" என்று கூறியுள்ளார்.

    ×